ஒட்டன்சத்திரம் அருகே குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
ஒட்டன்சத்திரம், பிப்.5- இடையக்கோட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி யை சுத்தியலால் அடித்துக்கொலை செய்த மற்றொரு விவசாயி குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய் யப்பட்டார் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜோகிபட்டி ஊராட்சி கருமாசநாயக்கனூரைச் சேர்ந்தவர் விவசாயி வையப்பன் (வயது 55) .இவரை கடந்த மாதம் இதே ஊரைச் சேர்ந்த மற்றொரு விவசாயி சக்திவேல் (வயது 50) என்பவர் நிலத்தராறில் கொலை செய்தார்.இந்த வழக்கில் சக்திவேலை இடையக்கோட்டை காவல் ஆய் வாளர் முத்துலட்சுமி கைது செய்து சிறையில் அடைத்தார். சக்திவேலை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார். இதனையடுத்து சக்திவேலை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் விசாகன் உத்தர விட்டார். அதன்பேரில் திண்டுக்கல் சிறையில் அடைக் கப்பட்டிருந்த சக்திவேல், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
மானை கடித்துக்கொன்ற செந்நாய்கள்
கடமலைக்குண்டு, பிப்.5- தேனி மாவட்டம், வருசநாடு அருகே காமன்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவருக்கு இதே கிராமத்தில் சொந்தமாக தோட்டம் உள்ளது. நேற்று காலை அய்யனார் வழக்கம் போல தோட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது உடலில் ரத்த காயங்களுடன் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் இறந்த நிலையில் கிடந்தது. இது தொடர்பாக அய்யனார் கண்டமனூர் வனச் சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் புள்ளிமான் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த புள்ளிமானின் உடலில் உள்ள காயங்களை சோதனை செய்த கால்நடை மருத்துவர் செந்நாய்கள் தாக்கியதில் புள்ளிமான் காயமடைந்து அதிக அளவில் ரத்தம் வெளி யேறியதால் பலியானதாக தெரிவித்தார். இதையடுத்து புள்ளிமான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
சின்னமனூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
தேனி, பிப்.5- சின்னமனூர் அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்தி ருந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை கைது செய்த காவல்துறை யினர் தலைமறைவான ஒருவரை தேடி வருகிறார்கள். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் -கீழ புலாந்தபுரம் சாலையில் முல்லை பெரியாற்று பாலத்தில் கம்பம் அருகே கே.கே பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் கிருஷ்ணன் ,அவரது மனைவி சாந்தி ஆகியோர் விற்பனைக்கு 550 கிராம் கஞ்சா வைத்துள்ளனர் .அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த கம்பத்தை சேர்ந்த விருமாண்டி, அவரது மனைவி லதா ஆகியோர் 1.100 கிலோ கஞ்சாவை கொண்டு வந்துள்ளனர். விருமாண்டி காவல்துறையினரை கண்டு ஓடி விட்டனர். கிருஷ்ணன், சாந்தி, லதாவை கைது செய்த மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் அவர்களிட மிருந்து 1.650 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய விருமாண்டியை தேடி வருகிறார்கள்.
வீட்டின் புட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு
தேனி, பிப்.5- சின்னமனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூர் சீலையம்ப ட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்பாண்டியன் (வயது 33). இவர் ஆண்டி பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு குடும்பத்துடன் சென்றார். மீண்டும் ஊர் திரும்பிய போது வீட்டின் மேல்மாடி கதவுகள் உடைக்கப் பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக்கிடந்தன. அங்கி ருந்த பீரோவும் உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த தங்க சங்கிலி வளையல் உள்பட 6 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சின்ன மனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்: பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
தேனி, பிப்.5- பெரியகுளம் அருகே சருத்துபட்டி பகுதியில் வசித்து வருபவர் முனீஸ்வரன் (32). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் அவரின் உறவினரின் வீட்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை வீட்டில் தனியாக இருந்த பொழுது பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முனீஸ்வரனை கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் சார்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர் .15 நாட்கள் நீதிமன்ற காவ லில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து முனீஸ்வரனை சிறையில் அடைத்துள்ளனர்.
விருதுநகரில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
விருதுநகர், பிப்.5- விருதுநகர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆத்துமேடு அருகே உள்ள முனியசாமிகோவில் பகுதிக்கு சென்ற போது, அங்கு சந்தேகிக்கும்படி ஒருவர் நெகிழி பையுடன் நின்றி ருந்தார், பின்பு. அருகில் சென்று பார்த்த போது. அவர் கிழக்கு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு உள்ள அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற ஏஞ்சல் செல்வம் (30) என்பது தெரிய வந்தது, இதையடுத்து. அவரி டம் இருந்த பையை சோதனையிட்டனர். அதில் 1150 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஏஞ்சல் செல் வத்தை கைது செய்தனர்.
திண்டுக்கல் ஆட்சியரகத்தில் லிப்ட் அமைக்கும் பணியை துரிதப்படுத்துக! மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்
திண்டுக்கல், பிப்.5- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் மின்தூக்கி (லிப்ட்) வசதியை உடனடி யாக ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங் கத்தின் மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட செயலா ளர் பகத்சிங் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டத் தில் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். தங்க ளின் பல்வேறு தேவைகளுக் காக தினசரி ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்து செல்கி றார்கள். இவ்வாறு வருகை தரும் பொதுமக்களில் மாற் றுத்திறனாளிகளும் வயதா னவர்களும் அடங்குவார்கள். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல அதிகாரிகளின் அறை கள் முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் செயல்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் அதிகாரிகள் இருப்பதால் மாற்றுத்திற னாளிகளும் வயதானவர் களும் அதிகாரிகளை சந் திக்க முடியாமல் மிகுந்த சிர மத்தை அனுபவிக்கிறார்கள். முதல் மற்றும் இரண்டாம் தளத்திற்கு செல்ல படிக்கட் டுகள் மட்டுமே உள்ளது. எங்கள் சிரமத்தை போக்க மின்தூக்கி அமைத்துக் கொடுக்க வேண்டும் என பல முறை மாவட்ட ஆட்சியரிடம் சங்கத்தின் சார்பில் வேண்டு கோள் வைத்ததன் பலனாக கடந்த ஆண்டு லிப்ட் அமைப் பதற்கான பணிகள் துவங் கப்பட்டது. பணிகள் துவங்கப்பட்டு ஓராண்டு கடந்த பின்னரும் இன்றுவரை லிப்ட் அமைக் கும் பணிகள் முழுமை பெற வில்லை. இதனால் மாற்றுத் திறனாளிகள் வயதானவர் கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மிகக்கடு மையாக பாதிக்கப்படுகின்ற னர். எனவே, மாவட்ட ஆட்சி யர் உடனடியாக இவ்விச யத்தில் தலையிட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் லிப்ட் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளனர்.
சாலையில் கிடந்த நகை,பணத்தை எடுத்துக் கொடுத்த தூய்மைப்பணியாளர்களுக்கு பாராட்டு
சின்னாளப்பட்டி, பிப்.5- திண்டுக்கல் மாவட் டம், சித்தையன் கோட்டை அருகே மல்லையாபுரத்தை சேர்ந்தவர் அமராவதி (60). இவரது மகள் முருகேஸ்வரி, பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூரில் குடும்பத்துடன் வசித்து வரு கிறார். முருகேஸ்வரி தனது எட்டரை பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணத்தை கடந்த மாதம் தாயார் அம ராவதியிடம் கொடுத்து வைத்திருந்தார். இந்நிலையில் முரு கேஸ்வரி தனது நகை, பணத்தை நெல்லூ ருக்கு கொண்டு வரும்படி தனது தாயா ருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அமராவதி பணம், நகை யை மணிபர்சில் வைத்து அதனை துணிகளு டன் சேர்த்து கட் டைப்பையில் போட்டு மல்லையாபுரத்திலிருந்து பேருந்தில் ஏறி சித்தரேவு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி யுள்ளார். அப்போது அமராவதி கட்டைப் பையிலிருந்து துண்டை எடுத்தபோது. நகை, பணம் இருந்த மணிபர்ஸ் சாலை யில் விழுந்துவிட்டது. இதனை அவர் கவ னிக்காமல் மகள் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு சென்று பார்த்த போது பர்ஸ் இல்லா ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். திரும்பி வந்து தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவ்வழியாக வந்த சித்த ரேவு ஊராட்சி தூய்மைப்பணியாளர்கள் ஜோதி,பஞ்சுபாண்டி ஆகி யோர் நகை, பணம் இருந்த பர்ஸை எடுத்து ஊராட்சி செயலாளர் சிவராஜனிடம் ஒப்படைத்த னர். இதையறிந்த அமராவதி உறவினர்களு டன் ஊராட்சி அலுவலகம் வந்துள்ளார். பின்னர் பட்டிவீரன்பட்டி போலீஸ் எஸ்பி தனிப்பிரிவு எஸ்எஸ்ஐ தங்கபாண்டி முன்னி லையில் அமராவதியிடம் எட்டரை பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணத்தை ஊராட்சி செயலர் சிவராஜன் ஒப்படைத்தார். சாலை யில் கிடந்த நகை, பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த சித்தரேவு ஊராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
சிவகங்கை: 4 லட்சத்து 18 ஆயிரம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
சிவகங்கை, பிப்.5- சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 042 குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங் கப்பட்டுள்ளது. பரிசு தொகுப்பு பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் தமிழக முதல்வ ருக்கு நன்றியை தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூட்டு றவுத்துறை மூலமாக நடத்தப்பட்டு வருகிற 635 முழுநேர நியாய விலைக் கடைகள், 171 பகுதி நேர நியாய விலைக் கடை கள், வும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 23 முழு நேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 829 நியாய விலைக் கடைகள் மூலமாக 4 லட்சத்து 18 ஆயி ரத்து 042 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப் பட்டுள்ளது .பொங்கல் பரிசு தொகுப்பில் வேஷ்டி, சேலை,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ,ஒரு முழு நீள கரும்பு, ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள் ளது. பொங்கல் பரிசு பெற்ற காளையார் கோவில் ரங்கம்மாள் கூறுகையில், நான் சாலையோர காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். தினந்தோறும் அதில் கிடைக் கக்கூடிய வருமானத்தில்தான் செலவு செய்து வருகிறேன். தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் பரிசு தொகுப்பு தமி ழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கக் கூடி யதாக மகிழ்ச்சியாக இருந்தது என்றார். காரைக்குடி சண்முகம் கூறுகையில், கூலி வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கி றோம். முன்பெல்லாம் பொங்கல் திரு நாளை கொண்டாடுவதற்கு மிகவும் சிர மப்பட்டோம். இந்த ஆண்டு தமிழக முதல் வர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தற்கு தமிழக முதல்வருக்கும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்ப னுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் மது சூதன் ரெட்டிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார். இத்தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம்,உதவி மக்கள் தொடர்பு அலு வலர் ராஜசெல்வன் ஆகியோர் தெரிவித்த னர்.