districts

எப்ஐஆர் பதிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்

மதுரை, ஏப்.1-   மதுரை ஆவினில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் விஷம்  அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.  தனது முடிவுக்கு ஆவின் பொது மேலாளரே காரணம் என்று கடிதம்  எழுதியிருப்பதால் பரபரப்பு ஏற்பட் டுள்ளது. இச்சம்பவத்தில் எப்ஐஆர் பதிந்து காவல்துறை நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. மதுரை புட்டுத்தோப்பு சாலை  காட்டுநாயக்கன் காலனியைச் சேர்ந்த மகாலெட்சுமி (25) என்பவர் மதுரை ஆவின் நிறுவனத்தில் பணி புரிந்தார்.இந் நிலையில் மகா லட்சுமி உள்பட  47 பேர் பணி நீக்கம்  செய்யப்பட்டனர். பணி நீக்கத்துக்கு  எதிராக சிஐடியு நடத்திய  போராட்டங்  களிலும் மகாலட்சுமி தீவிரமாக பங்  கேற்று வந்தார். இந்நிலையில் மீண்  டும் பணி நியமனம் செய்யப்படாத தால் மகாலட்சுமி விரக்தியடைந்த  நிலையில் இருந்ததாகக்கூறப்படு கிறது. இந்நிலையில் வெள்ளியன்று  ஆவின் நிறுவனத்துக்கு சென்ற மகா லட்சுமி அங்கு விஷம் அருந்திய  நிலையில் ஆவின் நிறுவனத்தின் மாடியில் இருந்து குதிக்க முயன்  றார். இதையடுத்து அங்கு பணி யில் இருந்தவர்கள் மகாலட்சுமியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு மகா லட்சுமிக்கு தீவிரச் சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாலட்சுமி கையில் வைத்திருந்த கடிதத்தில்,  மதுரை ஆவின் நிறுவ னத்தில் வேலைவாய்ப்பு அலுவல கம் மூலமாக கடந்த  2021  ஜனவரி 1  ஆம் தேதி பணியில் சேர்ந்தேன். அதி காரிகளின் தவறான நடவடிக்கை யால்  2023 ஜனவரி 4 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டேன். பணி நீக்க  உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையாணை பெற்றும் ஆவின் நிர்வாகம் பணியில் சேர்க்க மறுப்ப தால் நடைபிணமாக வாழ்ந்து வரு கிறேன். எனது முடிவுக்கு ஆவின் பொது மேலாளர் சாந்தியே காரணம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இது தொடர்பாக தமிழக கூட்டு றவு சங்க ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் இரா, லெனின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு  முறையாக பால்வளத் துறை மூல மாக அறிவிக்கை செய்யப்பட்டு தமி ழகத்தில் ஏழு மாவட்டங்களில்   மேலா ளர், துணை மேலாளர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர்,  சீனியர் பேக்டரி அசிஸ்டெண்ட் (SFA),  டெக்னீசியன், அலுவலர்கள் என பல  பிரிவுகளில் மதுரை, தேனி, விருது நகர், திருப்பூர், நாமக்கல் திருச்சி,  தஞ்சாவூர் ஆகிய ஏழு மாவட்டங்க ளில் 201 பணியாளர்கள் முறையாக தேர்வுகள் மற்றும்  நேர்முகத் தேர்வு நடத்தி பணியில் சேர்க்கப்பட்டனர். இதில் மதுரை ஆவினில் 47 பணி யாளர்கள் சேர்க்கப்பட்டனர். தமி ழகத்தின் ஏழு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட 201 பணியா ளர்கள் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் பணி செய்த நிலையில் 4. 1. 2023 அன்று எந்தவித முன் அறி விப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப் பட்டனர்.  இந்த பணி நீக்க உத்த ரவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்  பட்டு ஆவின் மூலம் அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கான தடையாணை பிறப் பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட் டங்களில் பணி நீக்கம் செய்யப் பட்ட பணியாளர்கள் மீண்டும் பணி யில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலை யில் மதுரை மற்றும் இதர ஐந்து மாவட்டங்களில் பணிநீக்கம் செய் யப்பட்ட பணியாளர்களுக்கு பணி  மறுக்கப்பட்டு வந்த நிலையில் சென்  னையில் பால்வளத்துறை ஆணை யாளரை நேரில் சந்தித்தனர்.அப்  போது தங்களுடைய பணி உத்தரவு மற்றும் நீதிமன்றம் பணி நீக்கத்திற்கு எதிரான தடையாணை உள்ளிட்ட வைகளை கொடுத்து மீண்டும் பணி யில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்க  வேண்டும் என்று பணி நீக்கம் செய்  யப்பட்ட ஊழியர்கள் வலியுறுத்தி னர். இத்தொழிலாளர்களின் கோரிக்  கையை முன்வைத்து சிஐடியு தமி ழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம்  சார்பாக மார்ச் 15 அன்று உண்ணா விரதப் போராட்டத்திற்கு  அனுமதி கோரிய போது காவல்துறை அனு மதி மறுத்தது. மீண்டும் 25 ஆம் தேதி உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டபோதும் மறுக்கப்பட்டது.  

இந்நிலையில் தன்னுடைய இறப்  பிற்கு மதுரை ஆவின் பொது மேலா ளர்  சாந்தியே முழு காரணம் என்று  மகாலட்சுமி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை முயற்சியில் ஈடு பட்டுள்ளார். அவரிடம் இருந்த கடி தத்தை பெற்றுக் கொண்டு இதுவரை  வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே  இந்த தற்கொலை முயற்சி குறித்து முதல் தகவல் அறிக்கையை காவல்  துறை பதிவு செய்ய வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட 201 பணியாளர் களையும் சம்பந்தப்பட்ட மாவட்டங் களில் பணியமர்த்திட தமிழக பால்  வளத்துறை உடனடியாக உத்தர விட வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.