districts

img

மதுரை புத்தகத் திருவிழா மாணவர்கள், குழந்தைகளை ஈர்க்கும் சிறார் பயிலரங்கு

மதுரை, அக்.13-  மதுரை, தமுக்கம் மைதா னத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி சார்பாக புத்த கத் திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தகத் திரு விழாவில் முன்னணி பதிப்ப கத்தாரின் அரங்குகள் பல்வேறு தலைசிறந்த எழுத் தாளர்களின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.  இரண்டாம் நாளான வெள்ளியன்று மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து இளை ஞர்கள், மாணவ மாணவியர் கள், புத்தக நேசிப்பாளர்கள் என ஏராளமானோர் திரளாக பங்கேற்று கண்டு களித்த னர்.  இங்கு பள்ளிக் குழந்தை களின் கலை ஆர்வத்தை ஊக்குவித்திடும் விதமாக சிறார் பயிலரங்கு எனும் சிறப்பு அரங்கு அமைக்கப் பட்டுள்ளது.  இந்த அரங்கில் தினந்தோறும் ஓவியம் காமிக்ஸ் வரைதல், ஓலைக் கலை. கதை எழுதுதல் ஆகி யவை குறித்து அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படு கிறது. மேலும், சிறார் கதை கூறல் மற்றும் சிறார் சினிமா திரையிடுதல் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்படு கின்றன. இந்தவகையில் புத்தகத் திருவிழா, சிறார் பயில ரங்கில் காமிக்ஸ் வரைவது குறித்த பயிலரங்கம் நடை பெற்றது. பயிலரங்கத்தை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சக்திவேல் தொடங்கி வைத்தார். ஷாலினி, வருவாய் வட் டாட்சியர் முன்னிலை வகுத்தார். ஆசிரியர் க.சர வணன் வரவேற்றார்.  ஓவியர் கோரமணன் குழந்தைகளுக்கு காமிக்ஸ் படக்கதை வரையும் கலையை பயிற்றுவித்தார். மாணவர்களின் கைவண் ணங்களில் உருவான வரை படங்கள் பயிலரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.  எழுத்தாளர் சுரேன் குழந்தைகளுக்கு வரை கலையின் முக்கியத்து வத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து கிழவனும் கட லும் எனும் சிறார் திரைப்படம் திரையிடப்பட்டது.