districts

மதுரை முக்கிய செய்திகள்

தாம்பரம் - நாகர்கோவில்  தீபாவளி சிறப்பு ரயில்

மதுரை, நவ.7-  தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - நாகர்கோவில்  ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி   தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு  ரயில் (06061) நவம்பர் 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமை களில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும் இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்  சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர்,  கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில்  நிலையங்களில் நின்று செல்லும்.  இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை  வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என்று  மதுரை தென்னக ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இராஜபாளையம் அருகே யானை தந்தங்கள்  கடத்திய 6 பேர் கைது

இராஜபாளையம், நவ.7- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை  அடுத்து, திங்கள்கிழமையன்று தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகள் இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானை தந்தம் பதுக்கி வைக்கப்  பட்டிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து அங்கு சோத னையிட்ட அதிகாரிகள் இருவரை கைது செய்து, அவர்களி டம் இருந்து தலா 120 செ.மீ உயரமுள்ள 23  கிலோ எடை யிலான இரு தந்தங்களை பறிமுதல் செய்தனர். இருவரை யும் இராஜபாளையம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.அப் போது, இராஜபாளையம் பி.எஸ்.கே நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முருகன் (34) என்பவர் அலுவலக  மாடியில் இருந்து கீழே குதித்து  தப்பி ஓட முயன்ற போது, அவருக்கு காலில் எலும்பு முறிவு  ஏற்பட்டது. அவரை  இராஜபாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் சேர்த்தனர். இதையடுத்து இரு  யானை தந்தங்களையும், பிடிபட்ட இருவரையும் இராஜ பாளையம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.  அவரிடம் விசாரித்ததில் கடத்தலில் சம்பந்தப்பட்ட மேலும்  6 பேரை கைது செய்து வனத்துறை அலுவலகத்தில் வைத்து உதவி மாவட்ட வன அலுவலர் நிர்மலா, இராஜ பாளையம் வனச்சரகர் சரண்யா ஆகியோர் விசாரித்து வரு கின்றனர்.  இதுகுறித்த செய்திக்காக காலை 7 மணிக்கு ராஜ பாளையம் வனச்சரக அலுவலகத்திற்கு நிருபர்கள் சென்ற னர். குடிக்க தண்ணீர் ,உணவு கூட வழங்காமல் இரவு  வரை நிருபர்கள் காக்க வைக்கப்பட்டு எந்த  தகவலும்  சொல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இராஜபாளை யம் வனத்துறை அலுவலர் தொடர்ந்து இதுபோன்று செய்து வருவதாக கூறுகின்றனர்.

6 கொள்ளையர்கள்  கைது

சிவகங்கை, நவ.7- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டம், திருப்புவனம் காவல் நிலையத்திற்குட்பட்ட பசியாபுரம் கிராமம், சிலைமான் ரயில்வே  ஸ்டேசன் பின்புறம் உதயா என்பவரது வீடு உள்ளது.இந்த வீட்டில் செப்டம்பர் 14 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் பின்புறம் உள்ள சிமெண்ட் கிராதி ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்தனர்.  வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து 32 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். இதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அறிவழகன்(25), தினேஷ்குமார்(18),கிருஷ்ணதேவா(19), ஹரிசெல்வம், அண்டா (எ) செல்வக்குமார் (24),  கைலேஷ்குமார்(23)ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களி டமிருந்து சுமார் 20 .5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.