districts

img

மதுரை புறநகரில் தீக்கதிருக்கு 430 சந்தாக்கள் ரூ. 7.33 லட்சம் ஜி. ராமகிருஷ்ணனிடம் அளிப்பு

மதுரை, ஆக. 5 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழுவின் பேர வைக் கூட்டம் ஞாயிறன்று, பெத்தானியாபுரம் அமிர்தா மகாலில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மத்தி யக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார். 

முன்னதாக, கட்சியின் புறநகர் மாவட்டக்குழு சார்பில் 303 ஓராண்டு சந்தா, 116 ஆறு மாத சந்தா, 9 தின சரி சந்தா என்று 430 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை ரூ. 7 லட்சத்து 33 ஆயிரத்து 925-ஐ தீக்கதிர் மாவட்டப் பொறுப்பாளர் பா. ரவி, அர சியல் தலைமைக் குழு  உறுப்பினர் ஜி. ராமகிரு ஷ்ணன், தீக்கதிர் செய்தி ஆசிரியர் ப. முருகன் ஆகி யோரிடம் வழங்கினார்.

மாநிலக் குழு உறுப்பினர்  எஸ். பாலா, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் த.செல்லக்கண்ணு, செ.முத்துராணி, வி.பி. முருகன், பி. ஜீவானந்தம், வி. உமா மகேஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பேரவையின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழுக் கள் சார்பில் கேரள மாநி லம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக் கான நிவாரண நிதியாகவும் ரூ. 20 ஆயிரம், ஜி. ராம கிருஷ்ணனிடம் வழங்கப் பட்டது.