“விநாயகரால்” தகராறு 12 பேர் கைது
சின்னாளபட்டி, செப்.18- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஜெ. ஊத்துப்பட்டி.இங்கு விநாயகர் கோவில் கட்டுவதில் இருதரப்புக்கிடையே நிகழ்ந்த மோதலில் 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் 12 பேரை கைது செய்துள்ளனர். ஜெ.ஊத்துப்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஞாயிறன்று ஒரு தரப்பினர் விநாயகர் கோவில் கட்டி திங்களன்று விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய முயன்றதாகக் கூறி, மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனிவேல், தனவேல், பாலாஜி, லட்சுமணன் மாரிமுத்து, செல்வ ராஜ், சக்திவேல் ராமகிருஷ்ணன் அருள் ஆகிய ஒன்பது பேர் மீதும், தனவேல் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவராமன், கோபாலகிருஷ்ணன், ராம சாமி, ரவி, சுரேஷ், தெய்வேந்திரன் உள்ளிட்ட பலர் வழக்குப் பதிவு செய்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் 12 பேரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். சிவராமன், தெய்வேந்திரன் ஆகியோரை காவல்துறை தேடி வருகிறது.
சாலை விபத்தில் ஒருவர் பலி
சிவகாசி அருகே கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். சிவகாசி சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (20). இவர் தனது பிறந்தநாளை நண்பர்களை அழைத்துக் கொண்டாடியுள்ளார். பின்பு, அனைவரும் காரில் சாத்தூருக்கு புறப்பட்டனர். காரை முனீஸ்வரன் என்பவர் ஓட்டியுள்ளார். கோணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலி டெக்னிக் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் உருண்டது. இதில் அனைவரும் காயமடைந்தனர். அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டனர். இவர்களில் கார்த்தீஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கும், முனீஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதில் கார்த்தீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாத்தூர் நகர் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவாரத்தில் யானை அட்டகாசம் வாழை, தென்னை நாசம்
தேனி, செப்.18- தேவாரம் பகுதியில் யானை வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளை கலக்கமடையச் செய்துள்ளது. தேவாரம் அருகே உள்ள வட்ட ஓடைப்பகுதியில் மக்னா யானை புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிலில் நஷ்டம்: தற்கொலை
தேனி, செப்.18- தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தற் கொலை செய்து கொண்டதாக பெரியகுளத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது . பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (48). இவர் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். பாண்டியன். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாண்டியன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பாலியல் பலாத்காரம்; இளைஞர் கைது
ஒட்டன்சத்திரம், செப்.19- ஒட்டன்சத்திரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்த னர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சாஸ்தாநக ரைச் சேர்ந்த நாகராஜ் ( 28). இவர் செப்.17-ஆம் தேதி 16 வயதுள்ள சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு அந்தச் சிறுமியைத் தாக்கி யுள்ளார். காயம் அடைந்த சிறுமி வலியால் துடி துடித்துக்கொண்டிருந்தார். தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர், ஒட்டன்சததிரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் புகார் கொடுத்த னர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நாக ராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
வத்தலக்குண்டு அருகே பொதுக்கிணறு பணி துவக்கம்
சின்னாளபட்டி செப்.18- வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டி யை அடுத்துள்ள பண்ணைப்பட்டி மதுரை குடிநீரேற்று நிலையம் அருகே விராலிப்பட்டிக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரம நிதியில் சமுதாய பொதுக்கிணறு அமைப்ப தற்கான பணிகள் திங்களன்று தொடங்கியது. நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பி னர் வேலுச்சாமி. மாவட்டக் கவுன்சிலர் கனிக்குமார், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்து, ஒன்றி யக் கவுன்சிலர் விஜயகர், ஊராட்சி மன்றத் தலைவர் நாக ராஜன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ராஜேந்தி ரன், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் கண் ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
திறனாய்வுத் தேர்வுகள் கால அவசகாசமின்றி நடத்தப்படும் கல்வி உதவித்தொகை தேர்வுகள்
ஒட்டன்சத்திரம், செப்.18- தமிழ் திறனாய்வுத் தேர்வுகளை போதிய கால இடைவெளியில் நடத்த வேண்டுமென மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருகிற அக்டோபர் ஏழாம் தேதி தமிழ்நாடு முதல்வர் திறனாய்வுத் தேர்வு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ 10 ஆயிரம் விதம் ஐந்து வருடத்திற்கு பட்டப்படிப்பு வரை மொத்தம் ரூ 50 ஆயிரம் வழங்கப்படஉள்ளது. இந்தத் தேர்வு முடிந்த ஒரு வார காலத்தில் அதே 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத் திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 15-ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் 12-ஆம் வகுப்பு வரை இரண்டு வருடத்திற்கு மொத்தம் ரூ 36 ஆயிரம் வழங்கப்படஉள்ளது. முதல்வர் திறனாய்வுத் தேர்வு நடத்தியவுடன் படிப்பதற்கு இடைவெளி இன்றி தமிழ் திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது. இரு தேர்விற்கும் குறைந்தது ஒரு மாதம் இடைவெளிவிட்டு நடத்தினால் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உதவித்தொபை பெறுவற்கு வசதியாக இருக்கும். இப்பிரச்சனையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரு சக்கர வாகனங்கள் மோதி இருவர் பலி
தேனி, செப்.18- தேனி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு வாலி பர்கள் உயிரிழந்தனர். போடி அருகே உள்ள போ.அணைக் கரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயமுரு கன் (24). இவரது நண்பர் மதுரை அருகே விர கனூரைச் சேர்ந்த மணிமாறன் (26). இவர் கள் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து, கட்டட உட்புற வடி வமைப்பாளராக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் ஜெயமுருகன், மணி மாறன் ஆகியோர் போடியிலிருந்து பழனி செட்டிபட்டிக்கு தனித் தனியே இருசக்கர வாகனங்களில் சென்றனர். அப்போது, தேனி அருகே கோடாங்கிபட்டி-பழனி செட்டிபட்டி சாலையில் எதிர் திசையில் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் ராஜதுரை (52) என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், மணிமாறன், ஜெயமுருகன் ஆகியோர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணி மாறன், ஜெயமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜதுரை ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை திடீர் ஒப்புதல்
புதுதில்லி, செப்.18- மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒன்றிய அமைச்ச ரவை திடீரென ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் திங்களன்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் செப்., 22 வரை நடைபெறவுள்ள நிலை யில், முதல் நாள் அவைக்குப் பின் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செவ்வாயன்று நடைபெறும் 2-ஆம் நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அனுமதியின்றி பிள்ளையார் சிலை வைத்த 40 பேர் கைது
திண்டுக்கல், செப்.18- திண்டுக்கல்லில் அனுமதியின்றி பிள்ளையார் சிலை வைத்த 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் உள்ளது குடை பாறைப்பட்டி. இந்த ஊரில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஊர் மக்கள் சார்பாக பிள்ளை யார் சிலை வைப்பதாகக் கூறி அனுமதி கேட்டதோடு பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் வழியாகத்தான் செல்வோம் என்று தகராறில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், காவல்துறையினர் இந்த ஊரில் சிலை வைப்பதற்கு அனுமதி மறுப்பதும் அவர்கள் தடை மீறிச் செல்வதும் தகராறு-ரகளை செய்வதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இந்த ஆண்டும் குடை பாறைபட்டியில் பிள்ளையார் சிலை வைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ள னர் பிள்ளையார் சிலை வைத்தவர்களை தடுத்து நிறுத்தி யதையொட்டி தகராறில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப் பட்டனர்.
திருச்சுழி அருகே கொலை
திருச்சுழி, செப்.18- திருச்சுழியில் அடையாளம் தெரியாத நபர்களால் ஒருவர் கொல்லப்பட்டார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நல்ல குளத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் மணிகண்டன் (37) இவருக்குத் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே ஊரில் தனித்தனி யாக வசித்து வருகின்றனர். தற்போது மணிகண்டனும் அவரது தாயாரும் தனியாக ஒரு வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இவர் அப்பகுதியில் நடக்கக்கூடிய குற்றச் சம்ப வங்கள் குறித்து அவ்வப்போது காவல்துறைக்கு உதவி யாக மறைமுகமாகச் செயல்பட்டு வந்துள்ளார். இதனால் இக்கிராமப் பகுதியில் மணிகண்டனால் பாதிக்கப்பட்ட சிலருக்கும் பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்களன்று அதிகாலை வயல் பகு திக்கு சென்ற மணிகண்டனை அடையாளம் தெரியாத அவரை தலைப் பகுதியில் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேய அவர் உயிரிழந்தார். பரளச்சி காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் குழந்தை பலி; தாய், தந்தை காயம்
ஒட்டன்சத்திரம், செப்.19- பழனி அருகே உள்ள பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (30) இவர் தனது மனைவி முத்து (25) இவர் களது குழந்தை ராஜேஸ்வரி (4) ஆகியோருடன் திண்டுக் கல்லுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பழனி- ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையில் கரட்டுப்பட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் சக்திவேல் அவரது மனைவி முத்து, குழந்தை ராஜேஸ்வரி ஆகியோர் காயம் அடைந்தனர். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சை பெற்று பின்னர் திண்டுக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்தவமனையில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காமல் குழந்தை ராஜேஸ்வரி இறந்தது. இதுகுறித்து அம்பிளிக்கை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சென்னை யை சேர்ந்த ஓட்டுநர் கனகராஜைக் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
2 மாணவிகள் மாயம்
திருநெல்வேலி, செப்.18- பாளையங் கோட்டை யில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தின் உள் ளேயே மாணவிகளுக்கான விடுதி அமைந்துள்ளது. விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற் றுக்கிழமை வழக்கம்போல் விடுதி வார்டன், மாணவி களின் எண்ணிக்கையை சரி பார்த்துள்ளார். அப்போது 2 மாணவிகளை காண வில்லை. அவர்கள் பள்ளி யில் பிளஸ்-1 படித்து வரு வதும், சங்கரன்கோவில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுதொடர் பாக மாணவிகளின் பெற் றோருக்கு போன் செய்து பள்ளி நிர்வாகம் விசாரித்த நிலையில், அங்கும் மாணவி கள் செல்லவில்லை. இதை யடுத்து பாளை காவல்நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது.