தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
சிவகங்கை மே 5- சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் இணைந்து கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவியருக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் நாசர் வரவேற்றார். வேதியியல் துறைத்தலைவர் ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். திருப்புவனம், சமய புரத்தாள்-சுயஉதவி குழு, நீலாபுராடக்ட்ஸ் உரிமையாளர் நிர்மலா சுயதொழில் திட்டமிடல் குறித்து பேசினார். சிவகங்கை மாவட்ட தொழில் மையம், உதவி இயக்குனர் தேவராஜ், மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப் படும் கடன் உதவிகள் குறித்து விளக்கினார். சிவகங்கை, மகளிர் திட்டம்உதவி மேலாளர், ராஜ்குமார், பொருட் களை சந்தைப்படுத்தல் உத்திகள் குறித்து பேசினார். நிகழ்வில் கல்லூரி இறுதியாண்டு மாணவ-மாணவிகள் 75 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். தொழில்முனை வோர் ராமர் நன்றி கூறினார்.
அரசுப்பேருந்து மோதி வாலிபர் பலி
மதுரை, மே 5- மதுரை மாவட்டம் பொதும்பு கிராமம் வடக்குத்தெரு வைச் சேர்ந்தவர் செல்லம் மகன் சி.காளிதாஸ். கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு முடி எடுத்து காதுகுத்துதல் நிகழ்வு நடைபெற்றது. இவர் தனது சகோதரி குழந்தையின் முடி இறக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை காலை பொதும்பு கிராமத்திலிருந்து புறப்பட்டு கோரிப் பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். கூடல் நகரை அடுத்துள்ள அஞ்சல்நகர் பாரத ஸ்டேட் வங்கி அருகே செல்லும்போது அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலப்பட்டியில் சாலை, சாக்கடை வடிகால்களை சீரமைக்க கோரிக்கை
கடமலைக்குண்டு, மே.5- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பட்டி கிராமத்தில் ஏராளமான தெருக்களில் சிமெண்டு சாலை மற்றும் சாக்கடை வடிகால்கள் கட்டப் படாமல் உள்ளது. மேலும் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த சிமெண்டு சாலைகள் சேதமடைந்த நிலையில் காணப்படு கிறது. இந்நிலையில் மேலப்பட்டி மெயின் ரோடு அருகே அமைந்துள்ள தெருபகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் சேதமடைந்து கழிவுநீர் சாலை யில் தேங்கி வருகிறது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் மழை நீருடன் சேர்ந்து கழிவுநீர் வீடுகளுக்கும் செல்கிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் ஊராட்சி நிர்வா கத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை. நோய்கள் பரவும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேலப்பட்டி கிராமத்தில் சேதமடைந்துள்ள சிமெண்டு சாலைகள் மற்றும் சாக்கடை வடிகால்களை சீரமைக்க வேண்டும். மேலும் அனைத்து தெருப்பகுதிகளிலும் சாக்கடை வடி கால்களுடன் கூடிய சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடையக்கோட்டையில் வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி
ஒட்டன்சத்திரம், மே.6- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலியானது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக் கோட்டையில் மகாமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் குலாம்மைதீன். இவர் வீடு முன்பு சிறிய கொட்டகை அமைத்து 4 செம்மறி ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை தூங்கி எழுந்து வந்த குலாம்மைதீன் வீட்டு முன்பு இருந்த தனது 4 ஆடுகளை, வெறிநாய் கடித்து இறந்து கிடந்ததை பார்த்தார். வெறிநாயை விரட்டி விட்டார். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ 40 அயிரம் ஆகும். தகவலறிந்து இடையக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மயில்சாமி, கால்நடை மருந்தகம் உதவி மருத்துவர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வெறிநாய் கடித்து உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டனர். வெறிநாய் கடித்து இறந்தது குறித்து குலாம்மைதீன் புகார் செய்யாமல் இறந்த ஆடுகளை அடக்கம் செய்துவிட்டார். இடையக்கோட்டையில் வெறிநாய் கடித்து ஆடுகள் இறப்பதும். பொதுமக்கள் காயமடைவதும் அடிக்கடி நடை பெறுவதால் வெறிநாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேருந்தில் நகை பணம் திருட்டு
சிவகாசி, மே.5- சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியில் இந்திரா காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(52). இவர் சிவகாசியிலிருந்து வீட்டிற்கு செல்ல சிற்றுந்தில் ஏறியுள்ளார். அப்போது பயணச் சீட்டை எடுப்பதற்காக கையில் வைத்திருந்த பையில் பர்சை எடுத்துள்ளார். ஆனால், அதில் வைத்திருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 காணாமல் போனது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, இதுகுறித்து சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகையில் தண்ணீர் திறப்பு குறைப்பு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
தேனி ,ஏப்.5- மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நிறைவுற்றதை தொடர்ந்து வைகையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது .சீராக தண்ணீர் வருவதால் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது . வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 117.15 அடியாக உள்ளது. நீர்வரத்து 204 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2114 மி.கன அடி. வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரண மாக நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் நீர் மட்டம் 57.49 அடியாக உள்ளது. வரத்து 113 கன அடி. இருப்பு 2336 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 40 அடி. வரத்து 47 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 85.77 அடி. வரத்து 24 கன அடி. திறப்பு 3 கன அடி. பெரியகுளம் அருகே உள்ள கும்பக் கரை அருவியில் தொடர் வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. வெள்ளிக்கிழமை காலை முதல் சீரான அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மழையளவு: பெரியாறு 0.6, கூடலூர் 2.2, சண்முகாநதி அணை 1.6, உத்தம பாளையம் 2.4, போடி 0.6, சோத்துப்பாறை 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் அரிசி கொம்பன் யானை அச்சத்தில் தோட்டத்தொழிலாளர்கள்
தேனி ,மே.5- மூணாறு மலைப்பகுதியில் பிடித்து ,பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை தற்போது ஹைவேவிஸ் மலைப் பகுதியில் நடமாடுவதால் தோட்டத் தொழிலாளர்கள் அச்ச மடைந்துள்ளனர் . கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு மலைப்பகுதியான சின்னக்காணல்,தேவிகுளம், சாந்தம்பாறை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிரா மங்களில் அரிசி கொம்பன் என்ற யானை கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது. இதுவரை 10 பேரை அந்த யானை மிதித்து கொன்றுள்ளதுடன் விவசாய நிலங்களை யும் சேதப்படுத்தி வருகிறது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள வனத்துறையால் மயக்கஊசி செலுத்தி அரிசி கொம்பன் பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை தேக்கடி அருகே பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அதன் கழுத்தில் அலைவரிசை கொண்ட காலர் ஐடி பொருத்தப்பட்டு அதன் இருப்பி டத்தை அறிந்துகொள்ளும் வகையில் வனத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த யானை மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளது. மற்ற காட்டு யானைகளுடன் சேராமல் தனியாக செல்லும் இந்த யானை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் சென்று வருகிறது. குடியிருப்பில் இருந்த நாய்கள் குரைத்து கொண்டே இருந்ததையடுத்து தொழிலாளர்கள் வெளியே வந்து பார்த்த போது ஆக்ரோசமாக சுற்றிய அரிசிகொம்பனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கருப்பசாமி என்ற தொழிலாளியின் வீட்டை உடைத்து வீட்டில் இருந்த உணவு பொருள் மற்றும் அரிசியை சேதப்படுத்திவிட்டு பின்வாசல் வழியாக வெளியே சென்றது. அதிக சத்தத்துடன் ஆக்ரோச மாக சுற்றி வருவதால் அதன் அருகில் செல்லவும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் நடமாட்டம் இருந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
விருதுநகரில் இஞ்சி விலை உயர்வு கிலோ ரூ.200க்கு விற்பனை
விருதுநகர், மே.5- விருதுநகரில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொது மக்கள் பெரும் அதிர்ச்சி யடைந்துள்ளனர். விருதுநகர் காய்கறி சந்தையில் கடந்த வாரம் 1 கிலோ இஞ்சியின் விலை ரூ.120க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வாரம் கிலோ ஒன்றுக்கு ரூ.80 வரை அதிகரித்து தற்போது 1 கிலோ இஞ்சியின் விலை ரூ.200 ஆக உள்ளது. இதனால், பொது மக்கள் மற்றும்ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெரும்பாலான வீடுகளில் காலை வேளைகளில் தேநீர் தயார் செய்யும் போது தேநீருடன் இஞ்சியை சேர்ப்பது வழக்கம். இதனால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என பலர் தேநீருடன் இஞ்சியை சேர்த்து பருகி வருகின்றனர். ஆனால், தற்போது இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருவதால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் கருவேப்பிலை கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 என்ற விலைக்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.
வைகை ஆற்றில் 3 பேர் சடலங்கள் மீட்பு: ஆட்டோ ஓட்டுநர் மயங்கி விழுந்து பலி
மதுரை, மே. 5- மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வை பார்ப்பதற்காக மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வெள்ளியன்று வருகை தந்திருந்தனர் இந்நிலையில் ஆழ்வார்புரம் பகுதியில் வைகையாற்றில் உள்ள தடுப்பணையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இதனைய டுத்து வைகை ஆற்றின் கல்பாலம் பகுதியில் 2 சட லங்களை தீயணைப்புதுறையினர் உதவியுடன் மீட்கப் பட்டன. அதில் மதுரை விளாச்சேரி ஜோசப்நகர்பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பிரேம்குமார் என்ற இளைஞரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு சடலம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் 3 உடல்களும் உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை வடக்கு மாசி வீதி பகுதியில் இருந்து தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு வருகை தந்த சுடலைமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து உயிரி ழந்தார். மதுரையின் பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி வந்ததாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிற பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியையும் பாதுகாப்பு பணியையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
தேனியில் கருத்தரங்கம்
தேனி,மே.5- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தேனியில் கருத்தரங்கம் நடைபெற்றது. தேனி அல்லிநகரம் செல்லம்மாள் அம்பிகாபதி துவக்கப் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் பி.பேயத் தேவன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். தாஜுதீன் தொடக்கவுரையாற்றினார். மாநில நிர்வாகி மங்கள பாண்டி யன் கருத்துரையாற்றினார். மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
மக்களுக்கு முழுமையாக தண்ணீர் வழங்கிட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து பணியாற்றுக இராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தல்
இராமநாதபுரம்,மே 5- இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், வளையப்பூக்குளம் ஊராட்சியில் மே 4 அன்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 53 ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை யேற்று ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் ஆட்சியர் தெரிவிக்கையில், பொது மக்களுக்கு முழுமையான அளவு தண்ணீர் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஒருங்கிணைந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதாரம் ஆராய்ச்சி யாளர் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் வறட்சி பகுதிகளுக்கு சென்று அப்பகுதி பொது மக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கும் வகை யில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்பொழுது மேற்கொள்ள திட்டமிட்ட பணிகளை பொறுத்தவரை இதன் மூலம் 2054-ஆம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு தேவை யான தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பணியினை 2024-ஆம் ஆண்டுக்குள் முடித்திட திட்ட மிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது உள்ள நிலைப்படி ஒவ்வொரு ஊராட்சி மன்றத் தலைவரும் தங்கள் பகுதிக்கு எந்தளவிற்கு தண்ணீர் கிடைக்க பெறுகின்றன. மேலும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதை திட்டமிட்டு ஆய்வு அலுவலர்கள் வருகையின் போது தெரிவிப்பது மட்டுமின்றி அவர்களுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை மேற்கொள்ள உறுதுணை யாக இருப்பதுடன் அவர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஒருங்கி ணைந்து செயல்படுவார்கள். திட்டமிட்டபடி பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு 2054-ஆம் ஆண்டு வரை பொதுமக்க ளுக்கு போதியளவு தண்ணீர் பெற்று பயன்பெறும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். பின்னர் நீர்வள ஆதார திட்டத்துறையின் விஞ்ஞானிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து விளக்க உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத்தலைவர்கள் இத்திட்டத்திற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்ட றிந்தவுடன் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உறு துணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
நிலக்கோட்டை ஆதார் மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
சின்னாளப்பட்டி.மே.05- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் அரசு கேபிள் டிவிநிறுவனம் சார்பில் தாலுகா அளவிலான ஆதார் மையம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் பல்வேறு கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், முதியோர்கள், இதர அரசு பயனாளிகள், ஆதார் எடுக்கவும், திருத்தவும் புதிய ஆதார் அட்டை பெற்றும் வந்தனர். தற்போது கடந்த இரண்டு மாதங்களாக போதிய பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதி பழுது கார ணமாக ஆதார் மையம் செயல்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் மக்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள், விவ சாயிகள் உட்பட பலரும் அவதிப்படுகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்ஆர்.சௌந்தரராஜன் கூறுகையில், தனியார் ஆதார் மையம் மற்றும் இதர வங்கிகளில் எடுக்கப்படும் ஆதார் அட்டையில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதால்,புதிய ஆதார் எடுப்பதை விட எடுக்கப்பட்ட ஆதாருக்கு திருத்தங்களே அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் இ-சேவை மையம் முதல் அனைத்து அரசுத்துறை நிறுவனங்களும் ஆதார் கார்டு தொடர்பான சேவைகளுக்கு ஆதார் மையத்திற்கு சென்று திருத்திக் கொள்ளுங்கள் என கூறி விடுகின்றன.ஆனால் நிலக்கோட்டை தாலுகா ஆதார் மையம் கடந்த இரண்டு மாதமாக பூட்டி கிடப்பதால் ஆத்தூர், திண்டுக்கல், வாடிப் பட்டி என குடும்பத்துடன் அலைந்து வருகின்றனர். மேலும் அரசுகேபிள் டிவி மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டால் போதிய உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் இல்லை. புதிய பணியாளர்களை நியமிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். ஆனால் தமிழ்நாடு எல்காட் நிறுவனம்மூலம் செயல்படும் ஆதார் மையங்க ளுக்கு தற்போது நவீன கூடுதல் இயந்திரங்கள்,உபக ரணங்கள் மற்றும் மிதமிஞ்சிய பணியாளர்கள் உள்ளதாக தெரிகிறது, எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் அவசர தேவைகருதி எல்காட் நிறுவன பணியாளர்களை கொண்டு உடனடியாக நிலக்கோட்டை தாலுகா ஆதார் மையத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.