நத்தம்,ஜன.31- 13 ஆவது தேசிய அளவிலான லங்காடி விளை யாட்டு போட்டி பிப்ரவரி 3 முதல் 5 ஆம் தேதி வரை திருப்பூரில் நடைபெறு கிறது. இதில் இந்திய துணைத் தலைவர் திண்டுக்கல் சரண் (26) தலைமையிலான தமி ழக அணியில் இருந்து நத் தத்தைச் சேர்ந்த வீரர்கள் கருப்புசாமி (26), நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி மாண வர்கள் ஜெயக்குமார் (17), யுவராஜ் (17), பெண்கள் அணியில் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சாருமதி (13), திண்டுக்கல்லை சேர்ந்த சௌந்தர்ராஜன்(22), ஜெய சீலன்(27) ,நெல்சன்(18) ஆகி யோர் தேர்வாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழக மெயின் அணியில் தேசிய விளையாட்டில் பங்கேற்க உள்ளனர்.