கும்பமேளாவில் 300 கி.மீ போக்குவரத்து நெரிசல்
மகா கும்பமேளாவில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையான பிப். 9 அன்று அதிகளவி லான மக்கள் நாடுமுழுவதும் இருந்து வாகனங்களில் திரண்டனர். இதனால் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரை சுற்றி சுமார் 300 கி.மீக்கு உ.பி எல்லை வரை லட்சக்கணக்கான வாகனங்கள்அணி வகுத்து நிற்கின்றன என தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஒன்றிய அரசுக்கு கண்டனம்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள சமூக வலை தள பதிவில், “ஒன்றிய அரசின் கொள்கையுடன் ஒத்துப்போகாத மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது ஆளும் பாசிச பாஜக அரசு. தமிழ் நாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இதுவரை ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்கவில்லை. தற்போது தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டி ருப்பது அராஜகத்தின் உச்சம். ஒன்றிய அரசின் இந்த பழி வாங்கும் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார்.
சீமானுக்கு சம்மன்
சென்னை: கடந்த சில தினங்களாகவே ஈ.வெ.ராவையும், அவரது பேச்சுக்களையும் சீமான் கடுமையாக விமர் சித்து வருகிறார். அவரது பேச்சுக்கு திராவிட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சீமானைக் கண்டித்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதனிடையே, கடலூர் மாவட்டம் வடலூரில் ஈ.வெ.ரா., குறித்து பேசிய சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்குச் சென்ற வடலூர் போலீசார் சம்மனை வழங்கினர். அதில், வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி தெரி விக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு அபராதம்
இராமேஸ்வரம்: இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்து இலங்கை நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஒரு படகோட்டி 20 மில்லியன் அபராதம் கட்ட தவறினால், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.
பிப்.11, 12, 16-இல் ஜல்லிக்கட்டு
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவு தல் மைதானத்தில் பிப்.11, 12 மற்றும் 16 ஆகிய நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டி களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைக்க உள்ளார்.
மீண்டும் கப்பல் போக்குவரத்து
நாகை: நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கே சன் துறைக்கு 2023 அக்.14 அன்று தொடங்கிய பயணி கள் கப்பல் சேவை பல்வேறு காரணங்களால் சில நாள்களி லேயே நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது வட கிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கப்பல் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி இந்தியா - இலங்கை இடையேயான ‘சிவகங்கை’ என்ற பயணிகள் கப்பல் சேவை பிப்.12 முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
விடுப்பு வழங்க தடையில்லை!
சென்னை: மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக் கோரி தண்ட னைக் கைதிகள் தாக்கல் செய்த மனு திங்களன்று விசார ணைக்கு வந்தது. மதுரை அமர்வின் மாறுபட்ட தீர்ப்பால், சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், “மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும், தண்டனைக் கைதி களுக்கு சாதாரண விடுப்பு, அவசரகால விடுப்பு வழங்க தடை இல்லை” என உத்தரவிட்டது.
அசல் ஆவணமின்றி பத்திரப்பதிவு
சென்னை: இனி அசல் ஆவணங்கள் இல்லாமலேயே பத்திரப்பதிவு செய்ய முடியும். பதிவுத் துறையில் பாது காக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் பதிவு செய்யலாம். ஃபெயிரா (FHRAI) அமைப்பு விடுத்த கோரிக் கையை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை யடுத்து பதிவுத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. ஆவ ணங்கள் தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ கவலை யின்றி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
தட்டு காணிக்கை சர்ச்சை
மதுரை: மதுரை பால தண்டாயுதபாணி கோயிலில் தட்டு காணிக்கை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அதில், அர்ச்ச கர்கள் தட்டு காணிக்கையை உண்டியலில் போட வேண்டும் என்ற செயல் அலுவலரின் உத்தரவு தற்போது திரும்பப் பெறப் பட்டுள்ளது. இதுகுறித்து செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
மதி அனுபவ அங்காடி திறப்பு
சென்னை: மதி அனுபவ அங்காடியை சென்னை தலை மைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் திறந்து வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படும். 37 மாவட்ட சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் இடம்பெறும்.
பெண்களை மிரட்டி பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது!
சென்னை, பிப்.10 - சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். தனியார் சட்டகல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே நிலையில், பாஜகவின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் அணி செய லாளராகவும் உள்ளார். இந்நிலையில் காமராசபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள் ளார். மேலும் அப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றவர், பெற் றோர் உதவியுடன் திருமணம் செய்வ தாகக் கூறி, சிறிது சிறிதாக ரூ.30 லட்சம் பணத்தையும், 15 சவரன் தங்க நகை களையும் பெற்றுள்ளார். இதற்கிடையில், தமிழரசன் வைத்தி ருந்த மடிக்கணினியை அப்பெண் சோதனை செய்த போது, பல பெண்களு டன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தமிழரசனி டம் கேட்ட போது, அப்பெண்ணுடன் தனிமையில் இருக்கும் வீடியோவை எடுத்து வைத்ததாக மிரட்டி மீண்டும் பணத்தை பறித்துள்ளார். இது குறித்து சிட்லப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ ரசனை கைது செய்த காவல்துறை, 10- க்கும் மேற்பட்ட பெண்களுடன் தமிழ ரசன் தொடர்பில் இருந்ததை கண்டறிந்த னர். தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த பெண்ணையும் மிரட்டி பணம் பறித்த தாக, அப்பெண் புகார் அளித்துள்ளார்.