districts

மதுரையில் அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்ற  3 பேர் கைது

மதுரை, ஜூன். 10-  மதுரை மாநகர் கோ.புதூர் பகுதியை சேர்ந்த வைத்திய நாதன் என்பவர் பாரதியார் சாலை பகுதியில் அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 5ஆம்தேதியன்று கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் பூட்டை  உடைத்து  கடைக்குள் சென்ற மர்மகும்பல்கடையில் இருந்த நகையை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  அப்போது லாக்கரை உடைக்க முடியாததால் அதனை எடுத்துச்சென்று கடைக்கு அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்தனர்.இதனை யடுத்து அடுத்த நாள் காலை குப்பை தொட்டியை சுத்தம் செய்ய வந்த மாநகராட்சி பணியாளர்கள் லாக்கர் கிடப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல்அளித்துள்ள னர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல்துறையினர் லாக்கரை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரித்தனர்.  பின்னர் அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்த வேல்பாண்டி, முத்து மாரி ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த கிரி என்ற வைரமுத்து ஆகிய 3 பேரையும் புதூர் காவல்துறை யினர் கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 நாட்கள் தொடர்ச்சியாக அடகுகடையை கண்காணித்த பின்னர் கொள்ளையடிக்க முயன்ற நிலையில் இரவு முதல். காலை வரை முயற்சி செய்தும் லாக்கரை உடைக்க முடியாததால், லாக்கரை தூக்கி சென்று குப்பை தொட்டி யில் வீசி சென்றதும், மறுநாள் எடுத்துசெல்லலாம் என திட்ட மிட்டதும் தெரியவந்துள்ளது.

;