திருவில்லிபுத்தூர், செப்.30- திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழக 31 மாணவர்கள் குழு, சிவகாசியில் நடைபெற்ற மாநில கலாச்சாரக் கலை போட்டியில் பங்குபெற்று ஒட்டு மொத்த ரன்னர் கோப்பையை பெற்றனர். கிராபிக்ஸ்,வார்த்தை விளையாட்டு போட்டிகளில் முதல் இடமும்,புதையல் வேட்டை,ஆர்க்கெஸ்ட்ரா, குரூப் நடனம்,புது ஜடியா அறிமுகம் போட்டிகளில் இரண்டாவது இடமும் பெற்றனர். பல்கலை வேந்தர் கே.ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர் எஸ்.சசி ஆனந்த் , பதிவாளர் வி.வாசுதேவன், டீன் முத்துக்கண்ணன் , கபிலன் ஆகியோர் மாணவர்களைப்பாராட்டினர்.