districts

மூன்றாவது நாளாக தொடரும் மீனவர்கள் வேலை நிறுத்தம்

இராமேஸ்வரம், நவ.1- இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 64 மீன வர்கள், 10 விசைப்படகுகளை விடு விக்க ஒன்றிய அரசு நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி இராமேஸ்வ ரம் மீனவர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் 3-ஆவது நாளாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது. துறைமுகத்தில்  750-க்கும் மேற்பட்ட விசைப்படகு கள் நிறுத்தப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த  மாதம் 14-ஆம் தேதி மீன்பிடிக்க  சென்ற போது 5 விசைப்படகுகளு டன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இதே போன்று கடந்த  வாரம் மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 37 மீன வர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 64  மீனவர்கள் மீது எல்லை தாண்டி  மீன்பிடித்ததாக வழக்கு பதிவு  செய்து நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தி சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இதே போன்று 10  விசைப்படகுகள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த நட வடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவர்கள் 10 படகுகளை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி இராமேஸ்வரம் மீன வர்கள் வேலை நிறுத்த போராட்  டத்தை மேற்கொண்டு வருகின்ற னர்.  இந்த போராட்டம் புதனன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இதனால் இராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் 750-க்கும் மேற்பட்ட  விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள் ளன. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரத்திற்  கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 3 அன்று அனைத்து விசைப்படகு மீனவ  சங்கம் சார்பில் மண்டபம் ரயில்  நிலையத்தில் ரயில் மறியல்  போராட்டம் மேற்கொள்ள உள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.