districts

img

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 2 தொழிலாளர்கள் பலி

சிவகாசி, ஏப்.15- சிவகாசி அருகே விளாம்பட்டியில் தனியார் பட்டாசு  ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரு தொழி லாளர்கள் உடல் கருகி பலியாகினர். சிவகாசி-ஆலங்குளம் செல்லும் சாலையில் உள்ளது விளாம்பட்டி. இங்கு பிரவீன் ராஜ்  என்பவருக்கு சொந்த மான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு, சனி யன்று காலை, வழக்கம்போல் 100க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும்  பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது,  தரை சக்கர பட்டசுகள் தயாரிக்கும் போது,   ரசாயன மூலப்பொருட்களை பட்டாசில் செலுத்தும்போது, திடீரென எதிர்பாராத விதமாக ராய்வு ஏற்பட்டதில் வெடி  விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவர் பலி இதில், அங்கிருந்த 2அறைகள் இடிந்து தரைமட்ட மாகின. இந்த விபத்தில்,   இடையங்குளத்தை சேர்ந்த தங்க வேல் (55), கருப்பசாமி 32, ஆகிய இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரி ழந்தனர். தகவறிந்து விரைந்து வந்த சிவகாசி  தீயணைப்புத் துறையினர்  மேலும் பரவ விடாமல் பல மணி நேரம்  போராடி தீயை அணைத்தனர். படுகாயம் மேலும் மாரித்தாய், கருப்பம்மாள்  ஆகிய இரு பெண்  தொழிலாளர்கள்  படுகாயத்துடன் இருவரை மீட்டனர்.   பின்பு, ஆம்புலன்ஸ் மூலம்  சிவகாசி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாரனேரி   போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.