ஒட்டன்சத்திரம் அருகே நகை பறித்த 2 பேர் கைது
ஒட்டன்சத்திரம், மார்ச் 10- ஒட்டன்சத்திரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை காவல் ஆய்வாளர் த்துலட்சுமி தலைமையில் தாராபுரம் - ஒட்டன்சத்திரம் சாலையில் கள்ளிமந்தையம் அருகே உள்ள நால்ரோட்டில் மார்ச் 9 அன்று இரவு வாகன தணிக்கையில் ஈடு பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம் சாலையில் இருந்து ஒட்டன் சத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பிஓட முயன்றனர். உடனே போலீசார் ஜீப்பில் விரட்டிச்சென்று அவர்க ளைப் பிடித்து, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், திருச்சி மாவட்டம் திரு வரம்பூரைச் சேர்ந்த ராமு (வயது 26), அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன்(வயது 36) என்பது தெரிந்தது. மேலும் போலீசார் விசாரித்தபோது கடந்த வாரம் கள்ளிமந்தையம் காவல் சரகம் கரியாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி தனது மோட்டார் சைக்கி ளில் பெட்டியிலிருந்த 16 பவுன் நகையை திருடியது மற்றும் ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்த விவசாயி லோகேஸ்வரன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி ரூ 2 ஆயிரம் பறித்தது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர். இது குறித்து இடையக்கோட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண்டிபட்டி : உரிய விலை கிடைக்காததால் பூக்களை கீழே கொட்டும் விவசாயிகள்
தேனி, மார்ச். 10, ஆண்டிபட்டி பகுதியில் செண்டு மல்லி பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.இதனால் பூ மார்க்கெட்டில் செண்டு மல்லி பூக்களின் விலை கிலோ ரூ.10க்கு விலை போனதால் பூக்களை விவசாயிகள் கீழே கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கன்னியபிள்ளைப்பட்டி, ராஜதானி, கொத்தபட்டி, சித்தார்பட்டி, தெப்பம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்கள் ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டில் ஏல அடிப்படையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். பூக்களின் தேவை அடிப்படையில் ஏலம் நடத்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செண்டுமல்லி பூக்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளதால், கடந்த சில நாட்களாக ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக செண்டு மல்லி பூக்கள் சாகுபடியில் குளிர்காலங்களில் செடிகள் சிறுத்து பூக்களின் வரத்து குறைந்து காணப்படும். அதேபோல் கோடை காலங்களில் அதிகளவு பூக்கள் வரத்து வரும். கடந்த வாரம் வரையில் ஆண்டிபட்டி பூமார்க்கெட்டிற்கு ஒருநாளைக்கு 200 கிலோ அளவில் செண்டுமல்லி பூக்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது 2 டன் அளவிற்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக செண்டு மல்லி பூக்களின் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ செண்டு பூக்கள் 30 ரூபாய் வரையில் விற்பனையான நிலையில், தற்போது ரூ.10க்கும் குறைவாகவே விலை போகிறது. இந்த விலை பூக்கள் பறிக்கும் செலவிற்கு கூட போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் பூக்களை பறித்து சந்தைக்கு கொண்டு வந்த விவசாயிகள், போதுமான விலை கிடைக்காததால் பூக்களை கீழே கொட்டிவிட்டு செல்கின்றனர். மேலும் சில விவசாயிகள் பூக்கள் மூடைகளை குப்பை வண்டியில் வீசிவிட்டு செல்கின்றனர். அதிகமாக பூக்கள் விலையும் ஆண்டிபட்டி பகுதியில் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் வாசனை திரவிய நிறுவனம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொத்து தகராறில் சகோதரர் கொலை
தேனி ,மார்ச்.10- சின்னமனூர் அருகே சொத்து தகராறில் உடன் பிறந்த சகோதரனை கொலை செய்த சகோதரரை கைது செய்த னர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே எரசக்கநா யக்கனூரை சேர்ந்தவர் முருகன் (வயது 49). இவரது சகோதரர் பால்பாண்டி (38). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. முருகன் மற்றும் அவரது குடும்பத்தி னர் தங்களது பூர்வீக 2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தனர். ஆனால் பால்பாண்டிக்கு குறைந்த அளவே பணம் கொடுத்துள்ளனர். இதனால் பால்பாண்டிக்கு முருகன் மீது ஆத்திரம் இருந்து வந்தது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த பால்பாண்டி முருகனிடம் சைகையால் பிரச்சனை செய்தார். அப்போது முருக னுக்கு சொத்து கொடுக்க முடியாது என தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சின்னமனூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.
போடியில் மதுபாட்டில் விற்றவர் 35 ஆவது முறையாக கைது
தேனி , மார்ச் 10- போடியில் மதுபாட்டில் விற்பனை செய்தவரை காவல் துறையினர் 35 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி குலாலர்பாளையத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது போடி குலாலர்பாளையம் வாமணன் தெருவை சேர்ந்த மொக்கையன் மகன் சுரேஷ் (46) என்பவர் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இவர் மீது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்த போலீஸார் இவரை கைது செய்தனர்.மேலும் இவரிடமிருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தி விசாரித்து வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே சட்டவிரோதமாக மதுபாட்டில் வைத்திருந்ததாக 34 வழக்குகள் உள்ள நிலையில் 35 ஆவது முறையாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.