இன்றைய நிகழ்ச்சி
மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் விளக்க - நிதி யளிப்பு பொதுக்கூட்டம்: நாள்: 27.08.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 5மணி, இடம்: யா.ஒத்தக்கடை, தலைமை: மாவட்டச் செயலாளர் கே.இராஜேந்திரன், வரவேற்புரை: மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, பங்கேற் போர் : மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., எஸ்.கே.பொன்னுத்தாய், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலா, கே.சாமுவேல்ராஜ்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சாத்தூர், ஆக.26- சாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், செயற்கை கால், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி, இயற்கை மரண உதவித்தொகை என 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார். நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்ம நாயகம், கோட்டாட்சியர் சிவக்குமார், ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சி யர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசுப் பேருந்து மீது சரக்கு வாகனம் மோதல்: 2 பேர் பலி
அருப்புக்கோட்டை, ஆக.26- திருச்சியில் இருந்து அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அருப்புக்கோட்டை வழியாக தூத்துக் குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை தாழை யூத்து பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஓட்டி னார். அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி புறவழிச்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவல கம் அருகே வந்த போது, டீசல் இன்றி சாலையின் நடுவே பேருந்து நின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்தின் பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், அரசு பேருந்தின் மீது மோதியது. இதில் அரசுப் பேருந்து தூக்கி வீசப்பட்டு சாலையோர பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த அசாம் மாநி லத்தைச் சேர்ந்த அஜ்ரூல் இஸ்லாம் (23), பேருந்தில் பயணம் செய்த கமுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (49) ஆகி யோர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த ராஜா, பழனிவேல், அந்தோணி, ரோகினி, கணேசன் உள்பட14 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிமம் இன்றி பட்டாசு வைத்திருந்த 4 பேர் மீது வழக்கு
விருதுநகர், ஆக.26- விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் மற்றும் எம்.புதுப் பட்டி பகுதிகளில் அரசு அனுமதியின்றி தகர செட்டிலும், பாதுகாப்பற்ற நிலையிலும் பட்டாசுகளை வைத்திருந்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் காவல்துறை யினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். வெள்ளூர் மயானம் அருகே உள்ள தனியார் கார்டனில் தகர செட்டில் பிஜிலி வெடிகள் அரசு அனுமதியின்றி தயார் செய்த நிலையில் இருந்தது. எனவே, வெடிகளை தயார் செய்த மகேஷ்வ ரன் (48) மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேர் மீது வழக்கு : இதேபோல் எம்.புதுப்பட்டி காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, பிஜிலி, லட்சுமி, இரட்டை, மூன்று வெடிகள் பாதுகாப்பற்ற நிலை யில் வைக்கப்பட்டிருந்தது. எனவே, வழிவிடு முருகன் (43), காசி (42) ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஒருவர் கைது
அருப்புக்கோட்டை, ஆக.26- அருப்புக்கோட்டை அருகே தனியார் ஆலையில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவரது 8 வயது மகள் அருகே உள்ள பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற பின்பு, அங்கு வந்த முனிய சாமி என்பவர் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் முனியசாமியை கைது செய்தனர்.
தேனியில் காவலர் தேர்வு: 2884 பேர் பங்கேற்பு
தேனி, ஆக.26- தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் சனிக்கிழமையன்று நடை பெற்ற தேர்வில் 2 ஆயிரத்து 884 பேர் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 3 ஆயிரத்து 488 விண்ணப்ப தாரர்களுக்கு 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. இதன்படி தேனி அருகே முத்துதேவன்பட்டியில் உள்ள இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி, தேனி கம்மவார் கலை கல்லூரி, நாடார் சரசுவதி கலை கல்லூரி மற்றும் மேரி மாதா பள்ளிகளில் 2 ஆயிரத்து 884 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர். 604 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்உமேஷ் டோங்கரே தெரி வித்துள்ளார்.
பட்டமளிப்பு விழா
தேனி, ஆக.26- உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவு தியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. கல்லூரி தாளாளர் எம்.தர்வேஸ் முகை தீன் தலைமை வகிக்க, மேலாண்மை குழு தலைவர் எஸ். முகமது மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் எச்.முக மது மீரான் வரவேற்றார். மாநில சிறுபான்மையினர் கழகத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இளங்கலை, முதுகலையைச் சேர்ந்த 914 மாணவ, மாணவி களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பருத்தியை கட்டுப்படியான விலைக்கு கொள்முதல் செய்திடுக! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
இராமநாதபுரம், ஆக.26- இராமநாதபுரத்தில் நடைபெற்ற விவ சாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில் வாகனன் பேசுகையில், ‘‘கடலாடி வட்டம் சாயல்குடியில் அமைந்துள்ள நூலகம் மிக வும் சிதிலமடைந்து உள்ளது. நூலகத்திற் கென்று போதுமான நிதி இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சிதிலம டைந்த கட்டிடத்தை புதுப்பித்து சீரமைத்து கொடுக்க வேண்டும், இந்த ஆண்டு பருத்தி விவசாயிகள் போதுமான விலை கிடைக்காததால் மிக வும் சிரமத்தில் அதிர்ச்சியில் உள்ளனர். ஒன்றிய அரசு முறையாக சந்தை தலையிட்டு திட்டத்தின் கீழ் பருத்தி கட்டுப்படியான விலைக்கு கொள்முதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். விவசாயிகள் சங்க நிர்வாகி தங்கச்சாமி கூறுகையில், ‘‘கடலாடி தாலுகா தரக்குடி ஊராட்சியில் வெறிபிடித்த மற்றும் நாய் கள் விவசாயிகளின் வீடுகளில் உள்ள ஆட்டுக்குட்டிகளை கடித்து விடுகின்றன. இதனால், விவசாயிகள் அச்சத்தில் உள்ள னர். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மருத்துவத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் உள்ள நாய்களை பிடித்து ஆட்டுக்குட்டிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
கண்மாய் கரையில் கனரக வாகனங்கள் இயக்கம்
உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத தனியார் கல்குவாரி நிறுவனம்
அருப்புக்கோட்டை, ஆக.26- அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்குவாரி நிறுவனமானது, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை மீறி பன்னிக் குண்டு கண்மாய் கரையில் கனரக வாக னங்களை இயக்கி வருகிறது. இதை யடுத்து, 3 வாகனங்களை காவல்துறை யினர் பறிமுதல் செய்துள்ளனர். எனவே, இந்நிறுவனத்திற்கான அனு மதியை மாவட்ட நிர்வாகம் உடனடி யாக ரத்து செய்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தாலுகா புலியூரான ஊரா ட்சிக்கு உட்பட்ட கிராமம் பன்னிக் குண்டு. இங்கிருக்கும் கண்மாயை தனி யார் கல்குவாரி நிறுவனங்கள் ஆக்கிர மிப்பு செய்து, அதன் கரை மற்றும் நீர் வரத்து ஓடையை மூடி அதன் மீது சட்ட விரோதமாகச் சாலை அமைத்துப் பயன் படுத்தி வந்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக கல்குவாரி களின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண் டும். சட்ட விரோதமாகப் போடப்பட்ட சாலையில் கனரக வாகனங்கள் செல் லக்கூடாது. ஆக்கிரமிப்பிற்கு முன்பி ருந்த (2016-17) நிலையே தொடர வேண் டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், முருகன் என்ற மற் றொரு தனியார் கல்குவாரி நிறுவனம் தொடர்ந்து கனரக வாகனங்களை கண் மாய் கரையில் இயக்கி வருகிறது. எனவே, இதை தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கிராம மக்கள் பல கட்டப் போராட்டங் களை நடத்தினர். ஆகஸ்ட் 8-ல் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போரா ட்டமும் நடைபெற்றது. முடிவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், ஒரே நாளில் கனரக வாகனங்கள் கண் மாய் கரையில் இயக்குவது நிறுத்தப் படும் என ஆட்சியர் உறுதியளித்தார். அதன் பிறகும் இரவு நேரங்களில் தனியார் கல்குவாரி நிறுவனத்தினர்,
உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி கண்மாய் கரையில் கனரக வாக னங்களை இயக்கி வந்தனர். இந்தநிலையில், வெள்ளியன்று மாலை கனரக வாகனங்களை தனி யார் நிறுவனத்தினர் வாகனங்களை இயக்கினர். இதுகுறித்து அப்பகுதி யைச் சேர்ந்த புலியூரான் கிராம விவ சாயிகள், பொதுமக்கள் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் வி.முருகனிடம் தெரிவித்தனர். எனவே, வட்டாட்சியர் மற்றும் திருச்சுழி துணை காவல் கண்காணிப்பா ளரிடம் வி.முருகன் புகார் செய்தார். இதையடுத்து, மண்டல துணை வட்டாட்சியர், காவல் நிலையத்தில் புகார் செய்தார். விரைந்து வந்த காவல்துறையினர் கண்மாய் கரையில் சென்ற தனியாருக்கு சொந்தமான 3 வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவையும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தாலுகா நிர்வாகத்தை யும் மீறி தான்தோன்றித் தனமாகத் தொடர்ந்து செயல்பட்டு, அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வரும் தனியார் கல்குவாரி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரி மத்தை உடனடியாக ரத்து செய்ய வேண் டுமென அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.