districts

img

மதுரை அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலி

மதுரை,ஏப்.28- மதுரை  ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளியன்று தனியார் பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட  பயணிகளுடன் போடிக்கு புறப்பட்டது. நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஓடை   பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது..  இந்த விபத்தில்  இடுபாடுகளில் சிக்கி உசிலம்பட்டியை சேர்ந்த பிச்சை (72) சேர்ந்த குருசாமி  (65) என்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்  30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். பயணிகள் அலறல் சத்தம்கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டு,தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பேருந்தை ஒட்டி வந்த ஒட்டுநர் மற்றும் நடத்துனர் தப்பியோடிவிட்டனர். இந்த விபத்து குறித்து மதுரை நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.