மாணிக்கம்தாகூர் எம்.பி வாழ்த்து
விருதுநகர், மே.8- பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்ற தற்கு மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:- தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்க ளன்று வெளியானது. அதில் விருதுநகர் மாவட் டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே, பல ஆண்டுகள் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதிதத்தில் முதலிடத்தைப் பெற்று பெருமை பெற்றுள்ளது. முதலிடம் பெற கடுமையாக உழைத்த ஆசிரியர் பெருமக்கள், பெருமை தேடித் தந்த மாணவ, மாணவி கள் ஆகியோருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
விருதுநகர், மே 8- விருதுநகர் மாவட்டத் தில் 1,231 மாணவ, மாணவி கள் பல்வேறு பாடப் பிரிவு களில் 100-க்கு 100 மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் மாவட்ட அளவில் ஏராள மான மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்ட அள வில் இ.நாகஜோதி மற்றும் அ.துர்கா ஆகிய மாணவிகள் 600க்கு 596 மதிப்பெண் கள் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். இ.இலட் சுமி தர்ஷனா மற்றும் என்.குருபூர்ணிமா ஆகியோர் 595 மதிப்பெண்கள் பெற் றுள்ளனர். 100க்கு 100 1231 மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் இயற்பி யல் பாடத்தில் 28 மாண வர்கள், வேதியியல்-125 பேர், கணிதம்-27, கணினி அறிவியல்-169 பேர், உயிரி யல்-31, தாவரவியல்- 32, விலங்கியல்- 4, வரலாறு-20, பொருளியல்-50, வணிக வியல்-296, கணக்குப் பதி வியல்-241. புள்ளியியல்-20 பேர், புவி யியல்-4, வணிக கணிதம்- 27, கணினி பயன்பாடுகள்- 145, கணினி தொழில் நுட்பம் -5, அடிப்படை மின் பொறி யியல்- 2 பேர், வேளாண் அறி வியல்- 4 பேர், அலுவலக மேலாண்மை- 1 என முழு மையாக 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நமது நிருபர்