திண்டுக்கல், ஏப்.21- திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகேயுள்ள சுக்காம்பட்டி, தெப்பக்குளத்துப் பட்டி பகுதியில் மர்ம நோய் தாக்கு தல் காரணமாக 12 மாடுகள் இறந் துள்ளன. கால்நடைத்துறை சார்பாக மாடுகள் உடற்கூராய்வு செய்யப்பட்டு மாதிரிகள் கால் நடை மத்திய பல்கலைக்கழகத்தி ற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே அகரம் பகுதியில் உள்ளது சுக்காம்பட்டி, தெப்பக்குளத்துப்பட்டி கிராமங் கள். இந்த கிராமத்தில் மக்கள் விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பதை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் எங்கும் இல்லாத வினோதமான நோய் தாக்குதல் காரணமாக இந்த ஊரில் கடந்த 2021ம் ஆண்டு சுமார் 40 மாடுகள் இறந்து போயின. தற்போது 12 மாடுகள் இறந்துள்ளன. மாடுகள் இறந்ததையடுத்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். தீவனம் உட்கொண்டிருக்கும் மாடுகள் திடீரென்று சரிந்து விழுந்து மூர்ச்சையாகி இரண்டு நாட்களில் இறந்து விடுகின்றன. விவசாயிகள் ஒரு மாடு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து விலை க்கு வாங்கி வந்து விவசாயம் செய்து வருகிறார்கள். திடீரென்று மாடு இறந்ததால் பல லட்சம் இழந்ததாக விவசாயி பாண்டி என்பவர் தெரிவிக்கிறார். மாடுகள் தொடர்ந்து இறந்து வருவதால் கடந்த சில ஆண்டுக ளாக இந்த கிராமத்தின் பொருளா தாரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், கால்நடைத்துறையும், மாடுகளை காப்பாற்ற உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மாட்டை இழந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மாட்டை இழந்த ஒவ்வொரு குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
கோழிப்பண்ணையிலிருந்து பாக்டீரியா தாக்குதலா?
இது தொடர்பாக மாவட்ட கால் நடைத்துறை இணை இயக்குநர் திருவள்ளுவனிடம் செய்தியாளர் கள் விசாரித்த போது அவர் கூறுகையில், தெப்பக்குளத்துப் பட்டி கிராமத்தில் மட்டும் தான் மாடுகள் மர்மமாக இறக்கின்றன. போட்டிலிசம் என்ற டாக்சின் காரணமாக மாடுகள் இறந்தி ருக்க வாய்ப்புள்ளது. 2021 ஆம் ஆண்டு இந்த நோய் தாக்குதல் இருந்தது. கடந்த ஆண்டு இல்லை. தற்போது நோய் பாதிப்பு காரணமாக மாடுகள் இறந்துள் ளன. இறந்த மாடுகள் உடற் கூராய்வு செய்யப்பட்டு மாதிரிகள் சென்னையில் உள்ள கால்நடை மத்திய பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் முடி வுகள் தெரிந்துவிடும். அதனைய டுத்து மாடுகளை காப்பாற்ற உரிய தடுப்பு மருந்துகள் கொடுக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்படும். ஏற்கனவே கானை நோய் தடுப்பு ஊசிகள் மாடுகளுக்கு போடப் பட்டுள்ளன. தற்போது நோய் கண்டறியப்பட்டவுடன் உரிய சிகிச்சை அளிக்கப்படும். மேலும் மண், மற்றும் நீரில் விஷம் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அருகில் கோழிப்பண்ணை இருப்பதாக தெரிவித்தனர். அந்த பண்ணையை ஒரு மாதத்திற்கு மூடச்சொல்லி உத்தரவிட்டுள் ளோம். ஏனெனில் கோழிபண்ணை யில் உள்ள ஒரு வித பாக்டீரியா தாக்குதலால் கூட இந்த மாடுகள் இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார். (ந.நி)