பெரியகுளம் அருகே சூறாவளி காற்றால் 100 ஏக்கர் வாழை சேதம்
தேனி, மே 22- பெரியகுளம் அருகே லட்சமிபுரம் பகுதியில் சூறாவளிக் காற்றால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்ட வாழை மரங்கள் ஒடிந்து ரூ 2 கோடி மதிப்பில் சேதமானது. பெரியகுளம் அருகே உள்ள லட்சுமி புரம் பகுதியில் ஞாயிறன்று மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சூறாவளிக் காற்றால் லட்சுமி புரம் பகுதியில் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து தேனி-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. வாழை சேதம் லட்சுமிபுரம் பகுதியில் பயிரிடப் பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சூறாவளிக் காற்று வாழை விவசாயத்தை முற்றிலும் புரட்டிப் போட்டது. குறிப்பாக லட்சுமி புரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்க ரில் பயிரிடப்பட்டிருந்த வாழை முழு வதுமாக முறிந்து சேதம் அடைந்துள் ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில் தொடர்ந்து கோடை காலங்களில் சூறாவளிக் காற் றில் வாழை விவசாயம் பாதிக்கப்படு கிறது. கடந்த ஆண்டு இதேபோன்று சூறாவளிக் காற்றால் வாழை விவசா யம் 60 சதவீதம் பாதித்தது. இந்த ஆண்டு 90 சதவீத வாழை விவசாயம் பாதிக்கப் பட்டு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த வாழைகள் பூ மற்றும் பிஞ்சு பருவத்தில் இருப்பதால் விவ சாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர், சேதமடைந்த பகுதிகளை வருவாய்த் துறையினர் உடனடியாகப் பார்வையிட்டு சேதம் மதிப்பீடை கணக் கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இந்த ஆண்டாவது நிவாரணம் வழங்க வேண்டும் என்ற னர்.
வெடி விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்களை இழந்து உதவிக்கு ஏங்கும் தோட்டத் தொழிலாளி
தேனி, மே 22- தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை -இரவங்கலாறு தேயிலை தோட்டத்தில் சஞ்சய்காந்தி -ஜோதி தம்பதியினர் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு அபினேஷ், அஸ்வின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் கல்லூரியில் பயின்று வந்த நிலையில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி சின்ன மனூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் கடை முன்பு தூங்கிக் கொண்டி ருந்த போது பாறை வெடி வெடித்து படுகாயம டைந்தனர். அபினேஷ் மதுரை தனியார் மருத்து வமனையில் மார்ச் 15-ஆம் தேதியும், அஸ்வின் மதுரை அரசு மருத்துவமனையில் மார்ச் 17-ஆம் தேதியும் இறந்துவிட்டனர் . மருத்துவ செலவுக்கு கடன் பெற்று செலவு செய்த நிலையில் அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என சஞ்சய்காந்தி-ஜோதி தம்பதி யினர் தேனி ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அது போல காமராஜபுரம் ஊராட்சி மாணிக்காபுரத்தை சேர்ந்த 100 நாள் வேலை மற்றும் சுயஉதவி குழு பெண்கள், காமராஜபுரம் முதல் சிங்காரக்கோட்டை வரை நூறு நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதாக வும், அவற்றை தனியார் தோட்ட உரிமையாளர் மரங்களை அகற்றி வேலி போட்டுள்ளதாக தேனி ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
கல்குவாரி பள்ளத்தில் மூழ்கி சகோதரிகள் பலி
மதுரை, மே 22- திண்டுக்கல் மாவட்டம் சிறுவாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருக்கு பூங்கொடி, விஜய லட்சுமி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இருவரும் சமை யல் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள சிதம்பரம்பட்டிக்கு இரவு சமையல் வேலைக்கு செல்வதற்காக ஞாயிறன்று மதுரை வந்துள்ளனர். பின்னர் அழகர்கோவிலில் சாமி தரி சனம் செய்துவிட்டு அன்றிரவு யா.ஒத்தக்கடை நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் கோவி லின் அருகில் கல்குவாரிக்காக தோண்டியிருந்த பள்ளத் தில் இருந்த தண்ணீரில் குளித்துள்ளனர். அப்போது எதிர் பாராதவிதமாக இருவரும் பள்ளத்தில் ஆழமான பகு திக்குச் சென்றதில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஞாயி றன்று இரவாகிவிட்டதால் உடலை மீட்கமுடியவில்லை. திங்களன்று காலை தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த சகோதரி களின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பட்டாசு ஆலையில் இடி மின்னல் தாக்கியதில் இரு அறைகள் தரைமட்டம்
விருதுநகர், மே 22- சிவகாசி அருகேயுள்ள சானார்பட்டியில் மாடசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. தொழிலாளர்கள் வழக்கம் போல் காலை முதல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலை யில் திடீரென மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பட்டாசு தயா ரிக்கும் அறையில் இடி மின்னல் தாக்கின இதில் இரண்டு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் இரண்டு அறைகளில் பட்டாசுகள் தீ பற்றி எரிந்தன. சிவ காசி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில காளிராஜ் என்பவர் ஓடி வரும் போது கல் அடித்து காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழிப்பறி செய்தவர்கள் கைது
நத்தம், மே 22- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கும ரப்பட்டியை சேர்ந்தவர் அழகேசன் (21). இவர் நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்ப வத்தன்று அழகேசன், தனது நண்பர்களுடன் அப்பகுதி யில் உள்ள நத்தம்-துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலை நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழி யாக இரு சக்கர வாகனத்தில் வந்த மதுரையை சேர்ந்த ஆகாஷ் என்ற ஜானி (22), பரளிபுதூர் இந்திராநகரை சேர்ந்த அபிமன்யூ (23), சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவிலைச் சேர்ந்த ஹரி தர்ஷன் (எ) மாடு ஹரி (25) ஆகியோர் அழகசேன் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இவர்கள் மூவரும் ஆத்திப்பட்டி மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தக வலையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர்.
சின்னாளபட்டியில் மறுசுழற்சி பயன்பாட்டு மையம் திறப்பு
சின்னாளபட்டி, மே 22- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சியில் பொதுமக்கள் வீடுகளில் தேவை இன்றியும் தேவைக்கு அதிகமாகவும் இருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை ஏழை எளிய பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாட்டு மையத்தில் வழங்கலாம் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பயன்பாட்டு மையத்தை பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா திங்களன்று திறந்து வைத்தார். நிகழ்வில் துணைத் தலைவர் ஆனந்தி. செயல் அலுவலர் செல்வ ராஜ், தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவுஆய்வா ளர் கணேசன் துப்புரவு மேற்பார்வையாளர்கள் தங்கதுரை சரளா உட்பட பேரூராட்சி உறுப்பினர்கள், துப்புரவுப் பணி யாளர்கள் கலந்துகொண்டனர்.
“எப்” பட்டா வழங்கிய விவசாயிகளுக்கு நிலத்தை ஒப்படைக்க கோரிக்கை'
திண்டுக்கல் மே 22 உச்சவரம்பு சட்டப்படி உபரி நிலமாக அறி விக்கப்பட்டு “எப்” பட்டா வழங்கப்பட்ட விவசாயி களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக திங்களன்று மனுநீதி நாளில் பழனி வருவாய் கோட்டாட்சியிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண் டுக்கல் மாவட்டச் செயலாளர் எம். ராமசாமி, தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் கே. சின்னத்துரை, வடபருத்தியூர் விவசாயிகள் செய லாளர் மீசைமுருகன், எஸ்.ஆறுமுகம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் என்.கணகு ஆகியோர் மனு அளித்தனர். “ஒட்டன்சத்திரம் வட்டம் பருத்தி கிராமத்தில் 40.60 ஏக்கர் நிலம் உபரி நிலமாக நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது 1979-ஆம் ஆண்டு உபரி நிலமாக அறிவிக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு “எப்” பட்டா வழங்கப்பட்டது ஆனால் நிலம் ஒப்படை செய்யப்படவில்லை இது தொடர்பாக பழனி வருவாய் கோட்டாட்சியரிடம் நில ஒப்படை செய்ய வேண்டும்” என வலி யுறுத்தி குப்பன் ஆறுமுகம் ஆகியோர் மனு அளித்தனர்.
காணாமல் போன பளியர் இனச் சிறுவர்களை மீட்கக் கோரி தேனி ஆட்சியரிடம் மனு
தேனி, மே 22- மத்தியபிரதேச மாநிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காணாமல் போன பளியர் இனச் சிறு வர்களை மீட்டுத்தரக்கோரி பெற்றோர்கள் தேனி ஆட்சியர் எஸ் .ஆர்.ஷஜிவனாவிடம் மனு.அளித்தனர். ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வேலப்பர் கோவில் அருகே உள்ள கதிர் வேல் புரத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 20-க்கும் மேற்பட்ட பளியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகு தியைச் சேர்ந்த ரவி தம்பதியின் 14 வயது மகன் தமிழரசன். சீனி மகன் 17 வயதுள்ள பட்டவராயன், வேல்முருகனின் 15 வயது மகன் ஞானவேல், ஆகியோர் குடும்ப வறுமை காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஹோட்டல் வேலைக்கு உசிலம்பட்டியைச் சேர்ந்த காசி, பிரபு ஆகியோரின் உதவி யுடன் மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்ததாக வும். தினசரி பெற்றோருடன் தொலைபேசி யில் பேசி வந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தனது மகன்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் உணவக உரிமையாளரிடம் கேட்டபோது கடந்த மாதம் இறுதியில் மூவரும் ஊருக்குச் செல்வதாகக் கூறி சென்று விட்டதாகக் கூறியுள்ளனர். வேலைக்குச் சென்ற தங்களது மூன்று மகன்களும் வீடு திரும்பாத காரணத்தால் இவர்களை கண்டுபிடித்துத் தரும்படி கடந்த 14-ஆம் தேதி பெற்றோர்கள் இராஜ தானி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறி சிறார்களின் பெற்றோர் கள் உறவினர்கள் சிறுவர்களை மீட்டுத் தரும்படி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.