நத்தம், ஜூலை 20- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலை மை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, முன் னாள் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம், நத்தம் பேரூ ராட்சி தலைவர் சேக் சிக்கந் தர்பாட்சா, ஒன்றிய செயலா ளர்கள் ரத்தினகுமார், பழ னிச்சாமி, நகரச் செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரு வாய் கோட்டாட்சியர் கம லக்கண்ணன் வரவேற்றார். இந்த விழாவில் உண வுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி கலந்துகொண்டு ரூ.10 கோடி மதிப்பில் 3484 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.