மதுரை, ஆக.9- மாநகராட்சி பள்ளிகளுக்கான கட்டிடங்களை கட்டித் தர மதுரையைச் சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர் ரூ.1.81 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (86). சொந்தமாக மோர் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்கிறார். 2018-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறைகள், கூட்ட அரங்கம், இரு சக்கர வாகனம் நிறுத் தும் இடம் ஆகியவற்றை ரூ.1.10 கோடி யில் கட்டிக் கொடுத்துள்ளார். கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் செலவில் டிபன் பாக்ஸ், தட்டு, அப்ப ளம், வடகம், அரிசி வாங்கிக் கொடுத்தார். தன்னிடம் பணிபுரியும் 40 ஊழியர் களுக்கும் உதவிகளை செய்து வருகிறார். அண்மையில் அப்பள வியாபாரி ராஜேந்திரனை நேரில் அழைத்து மாந கராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார் பாராட்டினார். இதையடுத்தே ராஜேந்திரனின் சேவை அனைவருக் கும் தெரிய வந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகை யில், ‘‘எனக்கு சொந்த ஊர் விருதுநகர். 5-ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். விருதுநகரில் பூண்டு கடையில் மாதம் 25 ரூபாய்க்கு பணிபுரிந்தேன். இப் போது எனக்கு கீழ் 40 பேர் பணிபுரி கின்றனர். 1951-ஆம் ஆண்டில் 300 ரூபா யுடன் மதுரைக்கு வந்தேன். முதலில் அரிசி, காய்கறி வியாபா ரத்தை செய்து வந்தேன்.
அதில் ஓரளவு வருமானம் கிடைத்ததை அடுத்து அப்ப ளம், வடகம், மோர் மிளகாய் வியாபா ரம் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத் தில் சைக்கிளில் போய் வியாபாரம் செய்து வந்தேன். 1988-ஆம் ஆண்டில் இரு சக்கர வாகனம் வாங்கினேன். நான் மதுரைக்கு வரும்போது எதை யும் கொண்டு வரவில்லை. இங்கு வந்துதான் சம்பாதித்தேன். அந்த பணத்தை மதுரை மக்களுக்கு கொடுக்கிறேன். என் 3 பெண்களுக்கு திருமணமாகிவிட்டது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துவிட்டேன். மீதமுள்ள வாழ்க்கையில் பிற ருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறேன். இறைக்கிற கிணறு ஊறும் என்பார்கள், அதுபோல் கிடைக் கிற வருவாயில் நன்கொடை வழங்கு கிறேன். தற்போது மாநகராட்சி திரு.வி.க. பள்ளி சமையல் அறை மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள் ளது. அங்கு ரூ.7 லட்சத்தில் புதிய சமை யல் அறையை கட்டித் தர உள்ளேன். மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளனர். அதற்கு ரூ.2.5 கோடி நிதியுதவி கொடுக்க உள்ளேன். செல்லூரில் மீனாட்சியம்மன் கோயி லுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டித் தர உள்ளேன். வியாபாரம் செய்யும் உத்தியை கட வுள் எனக்கு கொடுத்துள்ளார். அதில் கிடைக்கிற வருமானத்தில் நிறைய தானம், தர்மம் செய்கிறேன் என்று தெரி வித்தார்.