கிராவல் மண் லோடுடன் லாரிகள் பறிமுதல்
திருவில்லிபுத்தூர், மே 17- விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் வட்டம் துலுக்கன்குளம் கண்மாயிலிருந்து மணலுடன் வந்த இரண்டு டிப்பர் லாரிகளை வட்டாட்சியர் ரங்கசாமி நிறுத்தச் சொல்லி ஆய்வு செய்தார்.அப்போது அனுமதி சீட்டு இல்லாமல் கிராவல் மண் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து இரண்டு லாரிகளையும் ஐந்து யூனிட் கிராவல் மணலுடன் பறிமுதல் செய்தார்.ஓட்டுநர்கள் பாஸ்கர், காசி பெருமாள் மற்றும் முகவரி தெரியாத வண்டி யின் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய கோரி வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வட்டாட்சியர் புகார் மனு கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வன்னி யம்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் மதுரை ஆட்சியர் தகவல்
மதுரை, மே 17- மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள சமையலர்- 01 பணியிடத்தை முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் 30-வயது பூர்த்தி யடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். மாதிரி விண்ணப்ப படிவத்தை madurai.nic.in என்ற இணை யத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கண்காணிப்பாளர், அரசி னர் கூர்நோக்கு இல்லம், 164, காமராஜர் சாலை, சந்தை பேட்டை, மதுரை-09 என்ற முகவரிக்கு 31.05.2023 மாலை 5.30 மணிக்குள் கிடைத்திடும்படி அனுப்பி வைக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குபின் வரும் விண்ணப்பங் கள் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண் ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வாகனத்தை திருடிய இருவர் கைது
சின்னாளப்பட்டி, மே 17- திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது ரைக்குச் செல்வதற்காக சின்னாளப்பட்டி பிரிவில் உள்ள ஜூஸ் கடை முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திச் சென்றுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் சார்பு ஆய்வா ளர் கோமதி மற்றும் காவல்துறையினர் சிசிடிவி கேமிரா பதிவுகள் மூலம் விசாரணை நடத்தினர். இதில் இருசக்கர வாகனத்தை திருடிய பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த பூபால பாண்டியராஜன் (20), வலையபட்டியை சேர்ந்த கருத்தபாண்டி (20) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆளுநருக்காக அகற்றிய வேகத்தடைகளை மீண்டும் அமைக்க மக்கள் கோரிக்கை
சின்னாளபட்டி, மே 17- திண்டுக்கல் மாவட்டம். வத்தலக்குண்டுவில் தமிழக ஆளுநர் வந்ததையொட்டி பள்ளிகள் முன்பு இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக இந்த வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்தார்.அவர் வருவதையொட்டி வத்தலக்குண்டு- மதுரை சாலையில் 2 தனியார் பள்ளி கள் முன்பிருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. பள்ளி கள் திறப்பதற்கு முன்பாக இடிக்கப்பட்ட வேகத்தடை களை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டாசு கடையில் சிதறிய நிலையில் சடலம் மீட்பு: வாகனங்கள் கருகின
வெம்பக்கோட்டை, மே.17- வெம்பக்கோட்டை அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவரின் உடல் சிதறிய நிலையில் மீட்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வின்சென்ட் மகன் வைரமுத்து (40). இவர் அதே கிராமத்தில் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். இவர் பட்டாசு கடையின் அருகே செட் அமைத்து விதிகளை மீறி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழிலாளர் ஒருவரின் உடல் முற்றிலும் சிதைந்த நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த வர் கோட்டைப்பட்டியைச்சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இந்த விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீயில் கரு கின. இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
மயிலாடும்பாறை அருகே கிணற்றுக்குள் குதித்து வாலிபர் தற்கொலை
கடமலைக்குண்டு, மே 17- விழுப்புரம் சிவன்படை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 22). ஆறுமுகம் கடந்த 10 ஆண்டுகளாக கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே உப்புத் துரையில் அமைந்துள்ள கருப்பசாமி கோவி லுக்கு வந்து செல்வது வழக்கம். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட வெங்க டேசன் தன்னையும் கருப்பசாமி கோவி லுக்கு அழைத்து செல்லுமாறு ஆறு முகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியுள் ளார். அதைத்தொடர்ந்து செவ்வாய்க் கிழமை மாலை ஆறுமுகம் அவரது மகனான வெங்கடேசனை அழைத்துக் கொண்டு உப்புத்துரை கருப்பசாமி கோவி லுக்கு வந்திருந்தார். மாலை கோவில் வளா கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுந்த வெங்கடேசன் வேட்டை கருப்பசாமி தன்னை அழைப்பதாக கூறி கோவில் அருகே இருந்த தென்னந்தோப் பிற்குள் ஓடினார். இதைக்கண்ட ஆறுமுகம் வெங்கடேசனை பிடிப்பதற்காக பின்னால் ஓடினார். ஆனால் வேகமாக ஓடிய வெங்க டேசன் தோட்டத்திற்குள் இருந்த சுமார் 100 அடி ஆழ கிணற்றுக்குள் குதித்தார். கிணற் றில் 20 அடிக்கு மேல் நீர் இருந்ததால் நீச்சல் தெரியாத வெங்கடேசன் நீரில் மூழ்கி பலியானார். இது தொடர்பாக ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயி லாடும்பாறை தீயணைப்பு வீரர்கள் மூலம் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் நீருக்குள் மூழ்கிய வெங்க டேசனின் உடலை கண்டுபிடிப்பதில் சிர மம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மின் விளக்குகளை பயன்படுத்தி உள்ளூர் பொது மக்கள் சிலர் உதவியுடன் வெங்கடேசனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அதைத்தொடர்ந்து வெங்கடேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கூடலூர் அருகே அண்ணனை கொலை செய்த தம்பி கைது
தேனி, மே 17- தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள ஆங்கூர் பாளையம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் அன்னக் கொடி மனைவி விஜயா. இவர்களுக்கு சிவன் காளை (வயது 32), அன்பு (28) என்ற 2 மகன்களும், கனி (25) என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். சகோதரர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. சிவன் காளை உள்ளூரிலேயே கூலி வேலை பார்த்து வந்தார். அன்பு கோவையில் இரும்பு பட்டறை யில் வேலை பார்த்து வருகிறார். விஜயாவின் மாமனாருக்கு சொந்தமான சிறிதளவு வயல் உசிலம்பட்டி பகுதியில் இருந்தது .அந்த வயலை விற்பனை செய்த பணத்தை கேட்டு அன்பு ,விஜயாவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனை சிவன் காளை கண்டித்தார். இதில் அவர் களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திர மடைந்த தம்பி அன்பு கத்தியால் தனது அண்ணன் சிவன் காளையை குத்தினார். பலத்த காயமடைந்த அவரை அரு கில் இருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு வை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் ரூ.375 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் தகவல்
அருப்புக்கோட்டை மே 17- அருப்புக்கோட்டை நகராட்சியில் சுமார் ரூ. 375 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கருத்துக் கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை அமல்படுத்து வதற்கான கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் திட்ட உருவாக்கம் திருநெல்வேலி கோட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு விளக்கிப் பேசினர். மேலும், நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிர காசம்,நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், துணைத் தலைவர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், நகர்மன்ற உறுப்பி னர்கள் ராம திலகம், அல்லிராணி, மீனாட்சி, இளங்கோ, ஜோதிராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வீரபாண்டியில் இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு பதிவு
தேனி, மே 17- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவில் ராட்டினம் ஏறுவதில் இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் ராட்டினம் ஏறுவதில் இரு தரப்பி னர் மோதி கொண்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது .காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற மோதல் சம்பந்தமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் அதிருப்தியில் இருந்தனர். வீடியோ பதிவை கொண்டு ஆய்வு செய்த காவல்துறை யினர் செவ்வாயன்று வழக்கு பதிவு செய்தனர் .அதில் சின்னமனூர் ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பாண்டி (36),ராசு மகன் ராஜ பாண்டி (33),காமாட்சி மகன் இளையநிலா (35),முரு கேசன் மகன் செந்தில் (42) ஆகிய 4 பேர் மீதும் மற்றொரு தரப்பான அல்லிநகரம் ரைஸ் மில் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் மகன் ராஜேஷ் (45),காமுத்துரை மகன் சிவ பாலன், ராஜேந்திரன் மகன் விக்கி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகாசியில் ரூ.1.30 லட்சம் புகையிலை பறிமுதல்-2 பேர் கைது
சிசிவகாசி, மே.17- சிவகாசி வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் அருண்(45). இவர் மாத்தி தெருவில் கடை நடத்தி வருகிறார். இந்நிலை யில் இவரது கடைக்கு விளாத்திகுளம் பகுதியில் இருந்து கார் வந்தது. அதை போலீசார் சோதனையிட்டனர். அதில், ரூ.1.30 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகை யிலை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவற்றை காருடன் பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அவர் அயன்பொம்மையாபுரத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்(33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அருண், பாக்கியராஜ் ஆகிய இருவரை யும் போலீசார் கைது செய்தனர்.