ரூ.1,000 ஓய்வூதியம் கிடைக்காமல் தவிப்பு
மதுரை, டிச.26- மதுரை மாவட்டத்தில் மதுரை செல்லூர், அவனியா புரம் பகுதிகளில் ஏராளமான கைத்தறி, விசைத்தறி தொழி லாளர்கள் உள்ளனர். இவர்கள் முறைசாரா தொழிலா ளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். 60 வயது நிறைவடைந்த கைத்தறி, விசைத்தறி தொழிலாளர் களுக்கு அரசு மாதம் தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்குகிறது. இந்த ஓய்வூதியம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மூன்று மாதங்கள் வழங்கவில்லை என்கின்றனர் ஓய்வூதியம் பெறுவோர். புத்தாண்டும், பொங்கல் பண்டி கையும் கொண்டாடப்பட நிலையில் தங்களுக்கு நிலுவை யில் உள்ள ஓய்வூதியத்தையும் ஜனவரி மாத ஓய்வூதி யத்தையும் விரைவில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் நகை பறிப்பு
மதுரை, டிச.26- மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து மாரி, இவர் மதுரை மாவட்டக் கல்வித்துறை அலுவல கத்தில் பணியாற்று வருகிறார், இவர் கடந்த 15-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தபோது தத்தனேரி மேம் பாலத்தில் வைத்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார். முத்துமாரி அளித்த புகாரின் அடிப்படையில் செல்லூர் காவல்துறையினர் விசா ரணை நடத்தி நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவப்பாண்டி என்பவரைக் கைது செய்து அவரி டமிருந்த நகையைப் பறிமுதல் செய்தனர்.
பாண்டிகோவில் அருகே அடுத்தடுத்து விபத்து: 22 பேர் காயம்
மதுரை, டிச.26- மதுரை பாண்டி கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த சுற்றுலா வாகனம் ஞாயிறன்று நள்ளிரவு நிலை தடுமாறி சாலைத் தடுப்பின் மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனத்தை தீயணைப்பு-மீட்புத்துறையினர் துறையினர் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் 22 பேர் காயமடைந்தனர். போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர்.
சாலை விபத்தில் ஒருவர் பலி
திருவில்லிபுத்தூர், டிச.27- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேட்டு முள்ளி குளத்தில் வசிப்பவர் செல்வகுமார் (39). இவர் சம்பவத் தன்று இரவு இவர் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மல்லி பஜாருக்கு வந்து விட்டு திருவில்லி புத்தூர்- சிவகாசி பிரதான சாலையில் சென்று கொண்டி ருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் செல்வ குமார் ஓட்டி வந்த வாகனம் மீது மோதியது. இதில் செல்வ குமார் உயிரிழந்தார். மல்லி காவல்துறையினர் விசா ரிக்கின்றனர். இந்த விபத்தில் காயம் அடைந்த மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தங்கேஸ்வரர் ஆபத் தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
ஜன.12-இல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு'
விருதுநகர், டிச.26- விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க் காவல் படைக்கு வரும் ஜனவரி.12-ஆம் தேதி ஆட்கள் தேர்வு செய்யப் பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் மனோகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலி யாக உள்ள பணியிடத்திற்கு சேவை செய்ய, தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வரு கிற ஜனவரி 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற உள்ளது. எனவே, விருப்ப முள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, நல்ல உடல் திறன் உள்ளவராகவும், வயது வரம்பு 18-45க்குள் இருப்ப வராகவும், எந்தவித குற்றப்பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் ஒருவர் பலி
அலங்காநல்லூர், டிச.26- மதுரை அலங்காநல்லூர் கலைவாணர் நகரை சேர்ந்த வர் ஆனந்த் (42). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர் பணி முடித்து மதுரையில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டி ருந்தார். கல்லணை பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த பால் வண்டியும், அவரது இருசக்கர வாகனமும் எதிர் பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆனந்த் படுகாயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு
தேனி, டிச.26- ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் . சங்கத்தின் திண்டுக்கல் மண்டலப் பொதுச் செயலா ளர் எஸ்.ஜேம்ஸ் கஸ்பார் ராஜ் தலைமையில் துணைப் பொதுச் செயலாளர்கள், பாலையா, மாரிமுத்து, மத்திய சங்க நிர்வாகிகள், நாகராஜன், விஜயகுமார் குணசேகரன், ராமசாமி, ராஜாமணி, சுப்பையா, மாரிமுத்து உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் தேனி ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். “மனுவில் 2015-ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய அகவிலைப் படியை நிலுவையுடன் வழங்கவேண்டும். ஏனைய ஓய்வூ தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போல் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமலாக்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் வேறு துறைகளில் வழங்கப்படும் அனைத்துப் பணப் பலன்களை போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பள உயர்வை போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
லாரி மோதி வாலிபர் பலி
மதுரை, டிச.26- மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். சாலையைச் சேர்ந்தவர் நாகராஜ் (எ) ராஜன் (36). இவர் திங்களன்று காலை ஒன்பது மணியளவில் கூடல்நகர் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் உயிரி ழந்தார். விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
சாலை பராமரிப்பு பிரச்சனை ‘‘அடைப்பு’’ போராட்டம் வர்த்தகர்கள் முடிவு
நத்தம், டிச.26- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வர்த்தகர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் ஷேக்ஒலி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நத்தம் - மதுரை கடவூர் சாலை, நத்தம்-புதுப்பட்டி சாலை பரா மரிப்பை முறையாக செய்ய வலியுறுத்தி அடையாள “அடைப்பு” போராட்டம் நடத்துவது. நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தர அலுவலகம் அமைக்க அர சுக்கு கோரிக்கை வைப்பது, உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க தமிழக அரசை வலியுறுத்துவது என் பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பட்டியலின மக்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க மறுக்கும் நிர்வாகம்
மதுரை, டிச.27- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா சொக் கத்தேவன்பட்டியில் வசிக்கும் பட்டியலின மக்கள் 60 பேருக்கு ஒரு ஏக்கர் 95 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 22 ஆண்டுகளாகியும் பய னாளிகளுக்கு வீட்டுமனையை அளவீடு செய்து வழங்க வில்லை. கோரிக்கை மனுக்களையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பட்டியலின மக்களுக்கான நிலத்தை அளவீடு செய்துதர வலியுறுத்தி ஆதித்தமி ழர் விடுதலை கட்சி அமைப்பாளர் விடுதலை வீரன் தலைமையில் ஐம்பது பேர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தி னர்.
இளம்பெண் தற்கொலை
தேனி, டிச.26- தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி 1-ஆவது வார்டு அமராவதி பள்ளித் தெருவைச் சேர்ந்தவர் காளி முத்து. இவரது மகள் காளீஸ்வரிக்கும் ராஜா என்ப வருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடந்தது. திரு மணத்துக்கு முன்பே காளீஸ்வரி அதே பகுதி யைச் சேர்ந்த சுந்தரபாண்டி என்ற வினோத் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். திருமணத்துக்கு பிறகு இவர்களது உறவு நீடித் துள்ளது. சம்பவத்தன்று நள் ளிரவு 12 மணிக்கு காளீஸ்வரி யின் வீட்டுக்குச் சென்ற வினோத் கதவைத் தட்டி அவரை அழைத்துச் சென் றுள்ளார். அதை வினோத் தின் தந்தை அன்னக்கொடி, தாய் அன்னலெட்சுமி, அழ கர்ராஜா, அல்போன்சா, ஆண்டனி ஆகியோர் சேர்ந்து காளீஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த காளீஸ்வரி அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டி பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர்.
நகை பறிப்பு
தேனி, டிச.26- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கருத்தமடைப்பட்டி மெயின்ரோட்டைச் சேர்ந்த தெய்வேந்திரன் மனைவி கண்ணகி (55). இவர் சம்ப வத்தன்று தனது வீட்டுக்கு அருகே உள்ள பலசரக்குக் கடையில் காய்கறிகள் வாங் கிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் கண் ணகியின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க சங்கிலி யை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்து க.விலக்கு காவல்துறை யினர் விசாரித்து வருகின்ற னர்.
தூக்கிட்டு தற்கொலை
கடமலைகுண்டு, டிச.26- தேனி மாவட்டம் கட மலைகுண்டு அருகே உள்ள அய்யனார்புரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் ராக வன். இவருடைய மனைவி முருகேஸ்வரி (31). இவர் களுக்கு திருமணமாகி மூன்று வயதில் ரியாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது தந்தை வீட்டில் இருந்த முரு கேஸ்வரி ஞாயிறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடலூரில் டிராக்டர் எரிப்பு
தேனி, டிச.26- தேனி மாவட்டம் உத்தம பாளையம் கர்ணம் சந்து நகரைச் சேர்ந்தவர் நத்தர் (62). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான மினி டிராக்டரை கூடலூர் அருகில் பி.எஸ்.சி. தியேட்டர் பின் புறம் உள்ள தனது நிலத்தில் நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று காலை ஏழு மணி அளவில் அங்கு சென்று பார்த்தபோது டிராக்டர் எரிந்த நிலையில் இருந்துள் ளது. இது குறித்து நத்தர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித் தார். விசாரணை நடை பெற்று வருகிறது.
வடமாநிலத் தொழிலாளி மரணம்
நத்தம், டிச.26- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது கோசுகுறிச்சி. இங்கிருந்து துவரங்குறிச்சிக்கு செல்லும் நான்குவழிச்சாலையில் ஒத்தக்கடை பாலம் பகுதி யில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் (31) என்ற தொழிலாளி உயிரிழந்து கிடந்தார். நத்தம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
காலமானார்
மதுரை, டிச.26- மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சகர் பானு காலமா னார். மதிமுக தொழிலாளர் முன்னணி மாநில இணைப் பொதுச் செயலாளர் மகபூப்ஜான் அவர்களின் துணைவி யார் சகர் பானு (67) உடல்நலக்குறைவு காரணமாக திங்க ளன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், துணை மேயர் டி.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், அ. ரமேஷ், ஜெ.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராதா, பி.கோபிநாத், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுமேலாளர் என்.பாண்டி, பொறுப்பாசிரியர் எஸ்.பி. ராஜேந்திரான், மதுரை பதிப்பு மேலாளர் ஜோ.ராஜ் மோகன் மற்றும் சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் விளாங்குடியில் உள்ள அன்னாரது இல்லத்திற்குச் சென்று சகர் பானு உட லுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்க ளன்று மாலை நடைபெற்றது.
வளர்ப்பு விலங்குகளுக்கு ஆபத்து சிறுத்தையை பிடிக்க கோரிக்கை
தேனி, டிச.26- மாடு, ஆடு, நாய்கள் உள்ளிட்ட பிராணிகளை சிறுத்தை தாக்குவதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பெரியகுளம் பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கைலாசநாதர் கோவில் பின் புறம் உள்ள தனது மாந்தோப்பில் ஆறு ஜல்லிக்கட்டு காளைக் கன்றுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மாந்தோப்பு கொட்டகையில் இருந்த கன்றுகளில் ஒன்றை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றது. ஞாயிற்றுக்கிழமை இங்கு வந்த நாகராஜ் கன்றுகளை தேடிச் சென்ற போது மாதா கரட்டு மலைப்பகுதியில் சிதில மடைந்த கன்றின் உடல் கிடந்துள்ளது. இரண்டு காளைக் கன்றுகளை காணவில்லை. இதுகுறித்து வனத்துறையிடம் புகார் மனு அளித்துள்ளார். கைலாசநாதர் கோவில் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களில் எட்டு மாடுகள், 10-க்கும் மேற்பட்ட ஆடுகள், 15 நாய்கள் உள்ளிட்டவற்றை சிறுத்தை தாக்கிக் கொன்றுள்ளது. எனவே கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முள்ளிப்பள்ளத்தில் வீடுகளை இடிக்க நோட்டீஸ் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
சோழவந்தான், டிச.26- மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிரா மத்தில் சோழவந்தான் முதல் பேரனை வரை செல்லும் சாலையில் இருபுறமும் நெடுஞ்சாலை துறையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இதுகுறித்த நோட் டீசை வினியோகம் செய்தனர். மேலும், ஊராட்சி தலை வர், துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னி லையில் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் மேல் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பட்டா நிலமாகவும், வீட்டு அடிமனையாகவும் உள்ளதாகவும் கூறி பாதிக்கப்பட்ட மக்கள் திங்களன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனு வில், “ நெடுஞ்சாலைத்துறை நோட்டீசை ரத்து செய்து, நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கடைகளில் பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி
மதுரை, டிச.26- மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்று பேருந்து நிலையங்களில் உள்ள கடை களில் கோடிக்கணக்கில் வரி பாக்கி உள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மாட்டுத்தாவணி பகுதியில் எம்ஜிஆர் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு மதுரை மாநகராட்சிக்கு சொந்த மான 277 கடைகள் செயல்படுகிறது, 277 கடைகளின் உரிமையாளர்கள் சுமார் ஒரு கோடியே 69 லட்சத்து 87 ஆயிரத்து 370 ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாகவும், அதில் குறிப்பாக அரசு நிறுவனங்களான தமிழ்நாடு போக்குவரத்து அலுவலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி களும் தங்களுடைய ஏடிஎம் மையங்க ளுக்கு வரி பாக்கி செலுத்தாமல் இருப்ப தும் தெரியவந்துள்ளது, மதுரை மாநகராட்சி பேருந்து நிலை யங்களில் செயல்படும் கடை உரிமையா ளர்கள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளதும் தெரியவந்துள் ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்று பேருந்து நிலையங்களில் ஒரே நபருக்கு மூன்று முதல் நான்கு கடைகள் வாடகைக்கு வழங்கியுள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள் ளது.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி, டிச.26- நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க் கப்பட்ட நிலையில் மழை முற்றிலும் நின்ற தால் நீர் வரத்து குறைந்தது. இருந்தபோதும் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீ ரின் அளவைக் குறைத்து நீர் மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடு பட்டனர். தற்போது மீண்டும் நீர் பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணை யின் நீர்மட்டம் திங்களன்று காலை நில வரப்படி 141.80 அடியாக உள்ளது. நீர்வரத்து 296 கன அடி. திறப்பு 250 கன அடி. நீர் இருப்பு 7612 மி.கன அடியாக உள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் விரைவில் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டும். .அணைப் பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரி கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63.80 அடியாக உள்ளது. வரத்து 570 கன அடி திறப்பு 1769 கன அடி. இருப்பு 4371 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி. வரத்து 80 கன அடி. திறப்பு 30 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 125.95 அடி. வரத்து 24 கன அடி. திறப்பு 27 கன அடி. மழையளவு பெரியாறு-3.8 மி.மீ, தேக்கடி-9.2, கூட லூர்-1.4, சண்முகாநதி அணை-3.4, உத்தம பாளையம்-1.2, போடி-2.4, வைகை அணை- 30.2, மஞ்சளாறு-19, சோத்துப்பாறை-9 பெரியகுளம்-19, வீரபாண்டி-6.2, ஆண்டி பட்டி-13.8, அரண்மனைப்புதூர்-8.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் திங்க ளன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நிலக்கோட்டை யில் 32 மி.மீ, திண்டுக்கல்- 26.9, வேடசந்தூர் -26.7, கொடைக்கானல்- 21, சத்திரப்பட்டி- 11.6, நத்தம்-11.5, காமாட்சிபுரம்- 14.8 மி.மீ. என மழை பெய்துள்ளது. மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. வரதமாநதி, நங்காஞ்சியாறு 100 விழுக்காடு, பாலாறு, பொருந்தலாறு, பரப்பலாறு 95 விழுக்காடு, குதிரையாறு 93 விழுக்காடு, குடகனாறு 60 விழுக்காடு நிரம்பியுள்ளன.