districts

img

இராமநாதபுரத்தில் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ் கனவு’ கருத்தரங்கம்

இராமநாதபுரம், ஆக.25- இராமநாதபுரம் தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வியாழனன்று ‘மாபெரும் தமிழ் கனவு’ என்னும் கருத்த ரங்கம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன், தலைமை வகித்தார். மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பேரா சிரியர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் ‘மாபெரும் தமிழ் கனவு’ குறித்து பேசினார்.  அப்போது அவர் பேசுகையில், ‘‘மாபெ ரும் தமிழ் கனவின் நோக்கம் எல்லோரும் பொருளாதார முன்னேற்றம் பெற்று சிறந்து விளங்க வேண்டும் என்பதே. நமது பண் பாட்டின் பெருமையை இளைய தலை முறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்க ளுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் முக்கிய மான பகுதியாகும்.  எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழர் மரபு நாகரீகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, தொல் லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி, அரசின் திட்டங்க ளை செயல்படுத்தும் முறைகள் ஆகிய  தலைப்புகளில் சொற்பொழிவு வழங்கப்படு கிறது’’ என தெரிவித்தார்.  முன்னதாக மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புக் கான கண்காட்சி அரங்குகள் அமைக்கப் பட்டிருந்ததை மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர்  ஜெ.ஜெயரஞ்சன் பார்வையிட்டார்.  நிகழ்ச்சியில் தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) மாரிச்செல்வி, கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.