பெரம்பலூர், நவ.29- அரியலூரில் மாவட்ட வேளாண் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மூலம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் உட்பட ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் 3 புதிய திட்ட பணிகளுக்கும், பெரம்பலூர் மாவட்டத் தில் ரூ.31.38 கோடி மதிப்பில் 54 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அரியலூர் மாவட்டத்தில் 51 முடிவுற்ற பணிகளையும், பெரம்பலூர் மாவட்டத்தில் 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், மக்க ளவை உறுப்பினர்கள் ஆ.ராசா, தொல்.திரு மாவளவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், எம்.பிர பாகரன், ஆட்சியர்கள் பெ.ரமண சரஸ்வதி (அரியலூர்), ப.ஸ்ரீவெங்கடபிரியா (பெரம் பலூர்) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், கூட்டுறவு மண்டல இணைப் பதி வாளர் ம.தீபா சங்கரி, துணைப் பதிவா ளர்கள் ஆர்.ஜெயராமன், அறப்பளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.