பெரம்பலூர், ஏப்.7- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் போ தைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் பிப்ர வரி 12 அன்று தொடங்கி மாநிலம் முழுவதும் நடை பெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத் தில் பல்வேறு கிராமங்களில் கையெழுத்து முடிவுற்ற நிலையில், அதன் ஒரு பகுதி யாக வேப்பந்தட்டை ஒன்றி யத்தில் வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்தினை குவைத் தமிழர் நல சங்கத் தின் நிறுவனர் அகமதுகபீர் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எம்.சக்தி வேல் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் பி.ரமேஷ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சரவணன், ஆகி யோர் விளக்கிப் பேசினர். வாலிபர் சங்க மாநில துணைத்தலைவர் சலா வுதீன் சிறப்புரையாற்றினார். விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், துணைத்தலை வர் பாரதி, பொருளாளர் செல்வராஜ், விவசாயிகள் சங்க நிர்வாகி கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கையெழுத்திட ஆட்சியர் மறுப்பு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் வாலிபர் சங்கத் தினர் போதைக்கு எதிராக கையெழுத்து கேட்டபோது, இது அரசிற்கு எதிரானது போல் தெரிகிறது. எனவே கையெழுத்திட முடியாது என மறுப்பு தெரிவித்தார். போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு மக்கள் எழுச்சியுடன் கையெழுத் திட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியரே ஆதரவு தெரிவிக்க மறுப்பது வேத னையாக உள்ளது.