பெரம்பலூர், டிச.2 - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள் (சிஐடியு) சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித் தார்
. மாவட்டச் செயலாளர் ரெங்கநாதன், மாவட்ட பொருளாளர் இன்பராஜ் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட் டம் குறித்து சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் அகஸ்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் என்.செல்லத்துரை, கலையரசி ஆகி யோர் பேசினர். பெரம்பலூர் நகரில் போதுமான சாலை வசதி இல்லாததால், ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடுதலாக சிஎன்ஜி ஆட்டோ விற்கு மாவட்ட நிர்வாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் புதிய பர்மிட் வழங்குவதை கைவிட வேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் ஆட்டோக்களை சிஎன்ஜி ஆட்டோக்களாக மாற்றம் செய்திட தமிழக அரசு மானியம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி, சங்க நிர்வாகிகள் உட்பட சுமார் 250-க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். ஆர்ப்பாட்டம் காரணமாக திங்கள் கிழமை மதியம் வரை பெரம்பலூர் நகர் பகுதி யில் எந்த ஆட்டோக்கள் இயங்கவில்லை.