districts

img

தொட்டியபட்டி கிராமத்தில் பகுதிநேர ரேசன் கடை திறப்பு

பெரம்பலூர், ஜூன் 23 - பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் தேனூர்  ஊராட்சி து.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் தொட்டியபட்டி கிரா மத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பகுதிநேர நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பொது விநி யோக திட்ட துணைப்பதி வாளர் கே.கே.செல்வராஜ் தலைமை வகித்தார். பெரம் பலூர் சட்டமன்ற உறுப்பினர்  ம.பிரபாகரன் நியாய விலை  கடையினை திறந்து வைத்து  குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, அரிசி, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அப்போது தே னூர் ஊராட்சி பொதுமக்கள், கால்நடை மருத்துவமனை விரைவில் துவங்க வேண்டும். தொட்டியபட்டி - பெரம்பலூர் வழித்தடத்தில் பேருந்து வசதி இல்லை என கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு எம்எல்ஏ, விரைவில் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் தெரிவித்து கூடுதல் பேருந்து இயக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.