districts

img

‘‘அறிவோம் மார்க்சியம்’’ தொடர் பயிற்சி வகுப்பு

பெரம்பலூர், பிப்.6-  பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் அறிவோம் மார்க்சியம் தொடர் பயிற்சி வகுப்பு லட்சுமி மருத்துவ மனை சனிக்கிழமையன்று (பிப்.4) கூட்ட ரங்கில் நடைபெற்றது.  பயிற்சி வகுப்பிற்கு மக்களுக்கான மருத்துவர் கழக மாநிலச் செயலாளர் சி. கருணாகரன் தலைமை வகித்தார். தீக்க திர் பொறுப்பாசிரியரும், சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினருமான எஸ்.பி. ராஜேந்திரன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து, சோசலிசம், முதலாளித்துவம், பொதுவுடைமை, மார்க்சிய மெய்ஞானம், பாட்டாளிவர்க்கம் குறித்து விளக்க உரை யாற்றினார்.  கவிஞர் அகவி, சிபிஎம் மாவட்டச் செய லாளர் பி.ரமேஷ் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.ராஜேந்திரன், அ. கலையரசி, ஆர்.கோகுலகிருஷ்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் எம்.கருணாநிதி, செல்லமுத்து, மாவட்டக்குழு பி.கிருஷ்ணசாமி, சக்திவேல், பாடாலூர் பாஸ்கர் சாலைப்பணியாளர் சங்கம் சி.சுப்ர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மேலும், பிப்ரவரி 11 அன்று நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் எழுத்தாளர் எஸ். கவிவர்மன், ‘‘காரல் மார்க்ஸ் இன்று தேவை படுகிறாரா’’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.