districts

img

அறிவோம் மார்க்சியம் பயிற்சி வகுப்பு

பெரம்பலூர், மார்ச் 20 - பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் அறிவோம் மார்க்சியம் தொடர்  பயிற்சி வகுப்பு மார்ச் மாத ஞாயிற்றுக்கிழ மைகளில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 20 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தமிழ்வழிக் கல்வி இயக்க  மாநில செயலாளர் வை.தேனரசன் வரவேற் றார். தீ.ஒ.முண்ணனி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் எம்.கருணாநிதி தலைமை வகித் தார். மார்க்சியம் என்றால் என்ன என்ற தலைப்பில் தீக்கதிர் கட்டுரையாளர் அ. அன்வர்உசேன் சிறப்புரையாற்றினார். பின்னர் ஓசை கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் இளை ஞர்கள் இயக்கம் தி.சத்யா நன்றி கூறினார்.  மதியம் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு சமூகநீதி படைப்பாளர்கள் சங்க மாநில செய லாளர் இ.தவ்ஹீர்பாட்சா வரவேற்றார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் ப.காம ராசு தலைமை வகித்தார். மக்கள் ஜனநாயக  புரட்சியும் நமது கடமையும் என்ற தலைப் பில் தீக்கதிர் மதுரை பதிப்பு பொறுப்பாசிரி யர் எஸ்.பி.இராஜேந்திரன் சிறப்புரையாற்றி னார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட  பொருளாளர் த.லோகநாதன் நன்றி கூறி னார். மக்களுக்கான மருத்துவர் கழக மாநில  செயலாளர் சி.கருணாகரன், மார்க்சிஸ்ட் கட்சி  மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், தமுஎகச மாவட்ட செயலாளர் ப.செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.