பெரம்பலூர்/குடவாசல், ஜூலை 1- பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பெரம்பலூர் தன லட்சுமி சீனிவாசன் பொறியி யல் கல்லூரி கூட்டரங்கில் ஜூன் 30 அன்று ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப் படும் கல்லூரி கனவு திட்டத் தின் மூலம் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். இதில், பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபா கரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சி.இராஜேந்தி ரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறி வழகன், தனலட்சுமி சீனிவா சன் கல்லூரி மேலாண்மை இயக்குநர் மணி, மாவட்ட கல்வி அலுவலர் பெ.ஜெக நாதன் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ-மாண விகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மஞ்சகுடி கிராமத்தில் சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் உள்ள கலையரங்கில், 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர் களுக்கு உயர்கல்விக்கு வழி காட்டும், ‘கல்லூரி கனவு வழிகாட்டுதல்’ கையேட் டினை வழங்கி மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நிகழ்ச்சி துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலு வலர் ப.சிதம்பரம், மஞ்சக் குடி கல்லூரி தாளாளர் சீனி வாசன், மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள், குட வாசல் அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் மஞ்சக் குடி சுவாமி தயானந்தா சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி 12 வகுப்பு பயின்ற மாண வர்கள், கல்லூரி பேராசிரி யர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.