districts

நியாயவிலைக் கடை பணியிடங்கள் இணையத்தில் அனுமதிச் சீட்டைப் பெறலாம்

பெரம்பலூர், டிச.6-  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 02 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டுள்ளது.  இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 15.12.2022 முதல் 26.12.2022 வரையிலும் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 27.12.2022 அன்றும் பெரம்பலூர் - துறையூர் சலையில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி (தமிழ்வழிக் கல்வி) வளாகத்தில் நடைபெறவுள்ளது.  நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டை பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தின் வழியாக (www.drbapnlr.net/hallticket.aPhaP) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சந்தேகங்கள் ஏற்படின் பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் தொலைபேசி எண் 04328-296140-ஐ தொடர்பு கொள்ளலாம்.