பெரம்பலூர், ஜூலை 9 - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பெரம்பலூர் கோட்டம் பகிர்மான கழகம், சிறுவாச்சூர் உபகோட்டத்தின் சார்பில் மின்சார சிக்கனம் குறித்து இளம்பருவத்தி லேயே பள்ளி குழந்தைகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆ.ராம் குமார் முன்னிலை வகித்தார். மின்வாரிய சிறுவாச்சூர் உபகோட்ட உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களிடையே மின்சார சிக்கனம் குறித்து விளக்க உரையாற்றினார். மின் சிக்கனம் குறித்து தொகுப்புரை ஆற்றிய பள்ளி மாணவ-மாணவிகள் 5 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இள மின்பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மின் சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டது.