districts

img

அரும்பாவூர் ஏரியின் மதகு உடைந்து 500 ஏக்கர் பயிர்கள் சேதம்

பெரம்பலூர், டிச.3- பெரம்பலூர் அருகே ஏரியின் மதகு உடைந்து 500  ஏக்கர் பயிர்கள் நாசம டைந்த நிலையில், அதற்கு  நிவாரணம் வழங்க விவசா யிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் உள்ள பெரிய ஏரி 300 ஏக்கர் பரப்பு கொண்டது. ஒருமுறை நிரம்பினால் சுமார் 2500 ஏக்கர் நெல் சாகுபடியாகும் அளவுக்கு இதில் நீர் தேங்கும். வடகிழக்கு பருவமழையையொட்டி பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த சில தினங் களுக்கு முன்னரே இந்த  பெரிய ஏரியின் மதகு பகுதி யில் கசிவு ஏற்பட்டு நீர்  வெளியேறிக் கொண்டிருந் தது. இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் தெரி வித்த நிலையில், அதிகாரி கள் அதை கண்டுகொள்ள வில்லை.  

இந்நிலையில் ஃபெஞ்சல்  புயல் காரணமாக ஏரிக்கு அதிகமாக நீர் வந்ததால், செவ்வாய்க்கிழமை ஏரியின் மதகு பகுதியில் உடைப்பெடுத்தது. சிறிது நேரத்தில் உடைப்பு பெரி தாகி வயல்களுக்குள் வெள்ளம் பாய்ந்தது. இத னால் சுமார் 500 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. பயிர் இழப்பீட்டிற்கான நிவாரணத்தை அரசு வழங்க  வேண்டும் என பாதிக்கப் பட்ட விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.செல்லதுரை வலி யுறுத்தி உள்ளனர்.