பெரம்பலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஒன்றிய, மாநில அரசு களின் மருத்துவக் காப் பீட்டுத் திட்டங்களை சிறப் பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை யும், முதலமைச்சரின் காப் பீட்டு அட்டை கோரி விண் ணப்பித்தவர்களுக்கு காப்பீட்டு அட்டைகளையும் ஆட்சியர் க.கற்பகம் வியாழ னன்று வழங்கினார்.
108 அவசரகால ஊர்தி ஓட்டுநராக இருந்து, பணி யின் போது விபத்தில் சிக்கி மரணமடைந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி சுகந்தி யிடம், காப்பீடு தொகை ரூ.5,00,000-க்கான காசோ லையை ஆட்சியர் வழங்கி னார்.
பின்னர் ஆட்சியர் தெரி விக்கையில், “இத்திட்டத் தின் கீழ் மாவட்டத்தில், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை, தன லட்சுமி சீனிவாசன் மருத்து வக் கல்லூரி மருத்துவ மனை, தனலட்சுமி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மனை, லெட்சுமி மருத்துவ மனை, நிரஞ்சன் மருத்துவ மனை, அற்புதா மருத்துவ மனை, எம்.ஜி மருத்துவ மனை மற்றும் எஸ்.கே.எஸ். மருத்துவமனை ஆகிய 7 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்க ளுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் காப் பீட்டுத் திட்டங்கள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11,630 பயனாளி களுக்கு ரூ.26,84,62,843 சிகிச்சைக்காக வழங்கப் பட்டுள்ளது. குறிப்பாக 2,816 பயனாளிகளுக்கு ரூ.9,72, 16,504 செலவில் இதய அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. இதுவரை 1,41,437 குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டைகள் வழங் கப்பட்டுள்ளன” என்றார்.