districts

img

புதுவையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வாலிபர் சங்கம் கோரிக்கை

புதுச்சேரி, மார்ச் 24- புதுச்சேரியில் புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வழங்கக் கோரி  வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  ஏ.எப்.டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மூடும் முடிவை கைவிட்டு,  புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் கௌசிகன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஆனந்த், இந்திய மாணவர் சங்க செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிர்வாகிகள் நிலவழகன் லீலாவதி, விண்ணரசன், சஞ்சய், ரஞ்சித் குமார், பாஸ்கர், செம்மலர் ஜெயராஜ் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

;