districts

img

பெங்கல் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி, நவ.27- புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என்று முதல்வர் ரங்கசாமி தகவல் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக மாறியுள்ளது.

இந்நிலையில் புயலை எதிர்கொள்வது குறித்தும் புதுச்சேரி யில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலை மையில் புதனன்று (நவ.27)   சட்டப்பேரவை யில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பேரவைத் தலைவர் செல்வம், தலைமை செயலர் சரத் சவுகான், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பொதுப்பணித்  துறை, மின்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரி களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது, கடலூர்,சென்னை இடையே தான் புயல் கரையை கடக்கும் என கூறியுள்ளனர்.

புதுச்சேரியில் புயல் கரையை கடக்கும் என இருந்தால் அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. மழை நீர் தேங்காத வகையில் 60 மின் மோட்டார் பொருத்தப்பட்டு நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

121 நிவாரண முகாம்கள் 

தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தங்குவதற்காக 121 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் உணவுகள் ஏற்பாடு செய்யப்படும்.பேரிடர் மேலாண்மை நிதி தேவையான அளவு உள்ளதாகவும் குறிப்பிட்டார். அரசின் அனைத்து துறை களும் சரியான பணியை மேற்கொண்டு வருகின்றனர். காலாப்பட்டு கடற்பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்காக கற்கள் கொட்டப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.