புதுச்சேரி,ஏப்.21- நிழலில்லா தின வானியல் நிகழ்ச்சி புதுச் சேரியில் நடைபெற்றது.
சூரிய உதயத்தில் ஒரு பொருளின் நிழலா னது அதிக நீளத்தோடு இருக்கும். இந்த நிழலானது நீளத்தை குறைத்து கொண்டு வந்து உச்சி வேளையில் மிக குறைந்து காணப்படும். பின்னர் மீண்டும் சூரியன் மறை யும் வரை வளர்ந்து அதிகமாகி கொண்டே செல்லும். ஆனால் ஒரு வருடத்தின் 2 நாட்க ளில் மட்டும் உச்சி வேளையில் பொருளின் நிழலை காண இயலாது.அதாவது, சூரி யன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அப்போது நிழல் காலுக்கு கீழே இருக்கும். இந்த அறிதான நிழலில்லா தின வானியல் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.
ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சூரியன் ஒரு இடத்தில் செங்குத்தாக இருக்கும், அதன் படி சூரியன் செங்குத்தாக வரும்போது ஓர் இடத்தில் உள்ள பொருளினுடைய நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமா கிறது, அந்த நாளையே நிழல் இல்லா நாள் என்கிறோம்.
புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் துறை, புதுச்சேரி அறிவியல் இயக்கம் இணைந்து நிழலில்லா தின வானியல் நிகழ்ச்சி உப்பளத்தில் உள்ள பெத்திசெமி னார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க துணை தலைவர் ஹேமாவதி, முனைவர் மதி வாணன், ஆசிரியர்கள் விஜயகணபதி, தோபி யாஸ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்ற னர்.
நிழலில்லா நாள் குறித்து மாணவகளி டத்தில் ஆசிரியர்கள் சிறப்புரையாற்றினர். மேலும் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட் களை வைத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். இதனை ஏராள மான பொது மக்கள் கண்டு களித்தனர்.