புதுச்சேரி, டிச.2- பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு குழுக்கள் சென்று பார்வையிட்டன.
மாநிலச் செயலாளர் ஆய்வு
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட காட்டேரிக்குப்பம், திருக்கனூர், விநாயகம் பட்டு ஆகிய பகுதிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். அப்போது மழை சூழ்ந்த விவசாய பயிர்களின் பாதிப்புகள் குறித்து அங்கிருந்து விவசாயிகளிடம் கேட்ட றிந்தனர். அதேபோல் புதுச்சேரி நகர பகுதி களில் உட்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று கட்சியின் செயற்குழு உறுப்பினர் கலிய மூர்த்தி தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு கேட்டறிந்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சி யப்பன், பிரபுராஜ், விவசாய சங்க செயலாளர் சங்கர், சி.பி.எம் கமிட்டி உறுப்பினர்கள் விநாயகம், ரகுநாத், நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
பேரிடர் பாதிப்பு அறிவிக்க கோரிக்கை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ். ராமச்சந்திரன் கூறியதாவது:-
புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பொழிந்து உள்ளது. இந்தப் புயல் மழை பாதிப்பு அனைத்துப் பகுதி மக்களும் பல்வேறு வகைகளில் பாதித்துள்ளனர். எனவே ஒன்றிய மாநில அரசுகள் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்க வேண்டும். ஒன்றிய அரசு புயல் பாதிப்புகளை கண்டறிய உடனடியாக ஒன்றிய அரசின் குழுவை அனுப்பி வைக்க வேண்டும்.
மாநில அரசு முழுமையான கணக்கெடுப்பு நடத்தி நிவாரணங்களை அறி விக்க வேண்டும். தற்போது அறிவித்துள்ள ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் என்பது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவார ணம் வழங்க வேண்டும்.தற்போது அறி விக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் போது மானதாக இல்லை என்றும் கட்சியின் சார்பில் புயல் பாதிப்பு ஆய்வு செய்து ஆய்வறிக்கையை முதல்வர் ரங்கசாமி சந்தித்து வழங்க உள்ளோம் என்றார் அவர்.