புதுச்சேரி, ஜூன் 10- பணியின் போது விபத்தில் இறந்த கட்டுமான தொழிலாளர்கள் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத வித மாக பக்கவாட்டு சுவர் சாய்ந்ததால் பணி யில் ஈடுபட்டிருந்த 5 கட்டுமான தொழி லாளர்கள் இறந்துவிட்டனர். இறந்த தொழி லாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புதுச்சேரி அரசை வலியுறுத்தி வந்தன.
நிவாரணம் இந்நிலையில் இறந்த 5 கட்டுமான தொழி லாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு புதுச்சேரி சட்டப்பேரவை யில் திங்களன்று (ஜூன்10) நடை பெற்றது. முதல்வர் ரங்கசாமி இறந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்க ளுக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.