புதுச்சேரி, ஜூன் 12- ரெட்டியார்பாளையம் விஷவாயு சம்பவம் குறித்து புதுச்சேரி அரசு நீதி விசாரணைக்கு உத்தர விட கோரி சிபிஎம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி ரெட்டியார் பாளையம், புதுநகர் பகுதி யில் விஷவாயு தாக்கி சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்ப வத்திற்கு காரணமான பொதுப்பணித்துறை கழிவு நீர் கோட்ட அதிகாரிகள் மீது துறை சார்ந்த நட வடிக்கை எடுப்பதோடு, நீதி விசாரணைக்கு உத்தர விட வேண்டும். இறந்த சிறுமி யின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சமும், மற்றவர்களுக்கு தலா 30 லட்சம் வழங்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நடந்த சம்பவத்திற்கு பொறுப் பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராய ணன் பதவி விலக வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
ரெட்டியார்பாளையம் விழுப்புரம் சாலையில் நடைபெற்ற இம்மறி யல் போராட்டத்தில், சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் பெரு மாள், செயற்குழு உறுப்பி னர்கள் சீனிவாசன், கொளஞ்சியப்பன், கலிய மூர்த்தி, சத்யா, மாநில குழு உறுப்பினர்கள் இள வரசி, சஞ்சய்சேகரன், ராகுல் காந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற வர்களை ரெட்டியார் பாளை யம் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி விசிக உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பிலும் மறியல் போராட்டம் நடை பெற்றது.