புதுச்சேரி, ஜூன் 9 - புதுச்சேரி முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமி மோடியின் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மாநில தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக முதலமைச்சர் ரங்கசாமி உள்ளார். இந்த கூட்டணி சார்பில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்த லில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் பிரதமராக நரேந்திரமோடி தில்லியில் ஞாயி றன்று பதவியேற்றார். இந்த விழா வில் பாஜக ஆளும் மாநிலங்கள், கூட்டணி மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். ஆனால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.
தில்லியில் நடந்த தேசிய ஜனநா யக கூட்டணி தலைவர்கள் கூட்டத் திற்கு புதுச்சேரி முதல்வர் ரங்க சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் அந்த கூட்டத்திலும் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்க வில்லை. அதையடுத்து 3 ஆவது முறை யாக பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்பு நிகழ்ச்சியிலும் முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணித் துள்ளார்.
பதவியேற்பு விழாவிற்கு புதுவை மாநில பாஜக அமைச்சர்கள், எம்எல் ஏக்கள், மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
முதலமைச்சர் ரங்கசாமி சனிக் கிழமை மாலை அல்லது ஞாயிற்றுக் கிழமை காலை விமானம் மூலம் அவ ரது கட்சி அமைச்சர்களுடன் தில்லிக்கு செல்வார் என எதிர்பார்க்கபட்டது ஆனால் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை அவர் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக பாஜக அமைச்சர்களும் ஒன்றிய பாஜக அரசும் ரங்கசாமியை ஆட்டிப்படைத் தனர். தற்போது பாஜவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை யில் கூட்டணி கட்சிகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது.எனவே ரங்கசாமி யும் தனது ஆட்டத்தை துவங்கிவிட்ட தாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.