புதுச்சேரி புதுச்சேரியில் என்.ஆர். காங்கி ரஸ் - பாஜக கூட்டணி அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 4 வரை உயர்த்தி யுள்ளது. அதேபோல், மின்சார சேவைக்கான இதர கட்டணங்க ளையும் உயர்த்தியுள்ளது. இத னால், ஏழை - எளிய, நடுத்தரக் குடும்பங்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர்.
எனவே உயர்த்திய மின் கட்ட ணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் கைவிட வேண்டும்; மின்சா ரத் துறை அரசுத் துறையாகவே நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் புதனன்று (செப்.18) ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தன.
வெறிச்சோடிய சாலைகள்!
இந்தியா கூட்டணி கட்சிகள் விடுத்த இந்த முழு அடைப்புப் போ ராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வணிகர்கள் - எப்போதும் பரபரப் பாக காணப்படும் நேரு வீதி, அண்ணா சாலை, மறைமலை அடி கள் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள வணிக வளாகங்களை முழு மையாக அடைத்தனர். சிறு கடை கள் முதல் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. இதனால், மக்கள் நடமாட்டமின்றி அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஆட்டோ - டெம்போ ஓடவில்லை!
அதேபோல், திரையரங்குக ளில் ஒரு நாள் முழுவதும் காட்சி கள் ரத்து செய்யப்பட்டன. ஆட்டோ, டெம்போக்கள் மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப் படவில்லை. தமிழக அரசின் ஒரு சில அரசுப் பேருந்துகள் மட்டும் காவல் துறை பாதுகாப்புடன் இயக்கப் பட்டன.
பள்ளிகளுக்கு விடுமுறை!
அனைத்து தனியார் பள்ளிக ளுக்கும் விடுமுறை விடப்பட்டி ருந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி முதல்வர் ரங்கசாமி விடுமுறை அறிவித்திருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது. முழு அடைப்பு போராட் டத்தையொட்டி புதுச்சேரி முழுவதும் போலீசார் பெருமள வில் குவிக்கப்பட்டிருந்தனர்.
சாலை மறியல்!
மறைமலை அடிகள் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை எதிரே இந்தியா கூட்டணி தலை வர்கள் - தொண்டர்கள் ஆயிரக்க ணக்கில் திரண்டு ஆளும் அரசு களை கண்டித்து முழக்கமிட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாரா யணசாமி, திமுக மாநில அமைப்பா ளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செய லாளர் இரா. ராஜாங்கம், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தேவ. பொழிலன், சிபிஎம் புதுச்சேரி மாநில செயற் குழு உறுப்பினர்கள் வெ. பெரு மாள், தமிழ்ச்செல்வன், சீனுவா சன், கொளஞ்சியப்பன், சத்தியா, கலியமூர்த்தி, பிரபுராஜ் மற்றும் நகர கமிட்டி செயலாளர் மதிவா ணன், உழவர்கரை நகரச் செயலா ளர் ராம்ஜி, மாநிலக்குழு உறுப்பி னர்கள் ராமசாமி, ரமேஷ், சஞ்செய் சேகரன், சிபிஐ நிர்வாகிகள் விசுவ நாதன், நாரா.கலைநாதன், சேது செல்வம் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றுக் கைதாகி னர்.
காரைக்கால்
பாகூர், மதகடிப்பட்டு பகுதிக ளில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் சிபிஎம் கொம்யூன் மாநில செயற்குழு உறுப்பினர் வெ. பெருமாள், கொம்யூன் செயலா ளர் சரவணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் அன்புமணி, மாநிலக் குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப் பட்டனர். காரைக்காலிலும் முழு அடைப்பு போராட்டம் அமைதி யாக நடைபெற்றது.
மின்கட்டண உயர்வுக்கு எதிரான இந்த முழு அடைப்புப் போராட் டத்தை வெற்றிபெறச் செய்த புதுச்சேரி மாநில மக்களுக்கு இந்தி யா கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.