புதுச்சேரி, ஜூன் 8 - மக்கள் விரும்பாத சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றியதால் மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு மக்கள் சரி யான பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டதாக புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சனிக் கிழமை ( ஜூன் 8) செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது:
எதிர்கட்சிகளை மதிக்காத தன்மை, ஆணவப்போக்கு, தொழில திபர்களை மிரட்டுவது, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய வற்றை பயன்படுத்து வது, குடியுரிமை சட்டம், நீட் உட்பட மக்கள் விரும்பாத சட்டங்களை நிறை வேற்றி யது ஆகியவற்றுக்கு பாஜ கவுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்திய மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
400 தொகுதிகளை பெறு வோம் என மார்தட்டிய பாஜக 240 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரத மர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். மாநில கட்சி களை சமரசம் செய்து மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
மோடி சர்வாதிகாரத்தை கூட்டணி கட்சிகள் ஏற்கமாட்டார்கள்
பாஜகவுக்கும், மோடிக்கும் இது அவ மானம். சிறந்த அரசியல் வாதி என்றால் பிரதமராக மோடி பதவி ஏற்கக்கூடாது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் நீண்ட அனுபவம் உள்ள அரசி யல் தலைவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதி காரத்தை ஏற்க மாட்டார்கள். கூட்டணி கட்சிகளால் பாஜக ஆட்சி கவிழும். 5 ஆண்டு இந்த ஆட்சி நீடிக்காது.
புதுச்சேரி மக்கள் காங்கி ரசுக்கு தேர்தலில் அமோக வெற்றியை தந்துள்ளனர். பண பலம், அதிகார மீறல் ஆகியவற்றை தாண்டி தீர்ப்பை புதுச்சேரி மக்கள் வழங்கியுள்ளனர். முதலமைச்சர், அமைச்சர்கள், 22 எம்எல்ஏக்கள் இருந்தும் 28 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார்.
என்ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் நிறை வேற்றப்படவில்லை. மக்கள் எதிர்ப்பை மீறி ரெஸ்டோபார்கள் திறக்கப் பட்டுள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தோம். கார்களில் அமைச்சர்கள் வீதிஉலா வந்தாலும், பொதுமக்களை சந்திப்பது இல்லை.
2011ல் கட்சி ஆரம்பிக்கும் போது முதல்வர் ரங்கசாமி கூறிய மாநில அந்தஸ்தை 300க்கும் மேற்பட்ட முறை கூறினாலும், அதை பெற வில்லை. இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டுதான் மக்கள் காங்கிரசுக்கு வாக்க ளித்துள்ளனர்.
இதற்கு பிறகும் ஆட்சி யில் ரங்கசாமி நீடிக்க தார்மீக உரிமை இல்லை. மத்தியில் சில மாநிலங்களில் நாங்கள் கணித்த வெற்றி கிடைக்கவில்லை. உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.