districts

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தோட்டக்கலை ஊழியர் உயிரிழப்பு

புதுச்சேரி,நவ.14-
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பெர்தீஸ் செலுத்ஸர் (56). அவர்  வேளாண் துறை தோட்டக்கலை ஊழியர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ராஜ் நிவாஸ் தோட்டக்கலைப் பணி யாளராக பணியாற்றி வந்தார். 

அரசு விடுமுறை நாளான திங்களன்று (நவ.13) தோட்டப் பணிக்கு வந்துள்ளார். விடு முறை நாள் என்பதால் குறை வானோர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். உடல் நலம் குன்றிய பெர்தீஸ் செலுத்ஸர் ஓய்வறையில் மயங்கி விழுந் துள்ளார். இச்சூழலில் அவர் பணி முடித்து வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்போனில் அழைத்துள்ளார். பதில் எதுவும் வராததால், ராஜ்நிவாஸ் சென்று விசாரித்துள்ளார். அங்கு சரியான  பதில் கிடைக்கவில்லை. இத னால் பல இடங்களில் அவரை  தேடியுள்ளார். உறவினர்களுக் கும் தகவல் தெரிவித்து விசாரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், செவ்வா யன்று (நவ.14) காலை பணிக்கு வந்த ஊழியர்கள் ஓய்வறையில் பெர்தீஸ் செலுத்ஸர் இறந்து கிடந்ததை அறிந்து பெரிய கடை  காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த காவலர்கள், பெர்தீஸ்  செலுத்ஸரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.