districts

img

குருவிநத்தம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் முறைகேடுகள்

புதுச்சேரி,ஜூலை 4- பாகூர் குருவிநத்தம்  மாரி யம்மன் கோவில் அறங்காவலர் குழுவின்  முறைகேடுகள் குறித்து  இந்து அறநிலையத்துறை செயலாளரிடம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் மனு வழங்கியுள்ளது.

சிபிஎம் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பி னர் வெ.பெருமாள், பாகூர் கொம்யூன் கமிட்டி செய லாளர் சரவணன், மாநிலக்குழு உறுப்பினர் கலியன்,கமிட்டி உறுப்பி னர்கள் சண்முகம்,வடிவேல் ஆகியோர் செவ்வாயன்று  புதுச்சேரி இந்து அற நிலையத்துறை செயலர் சிவசங்கரனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- புதுச்சேரி  பாகூர் கொம்யூன் குருவிநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன், விநாயகர், திரவுபதி அம்மன் கோயி லுக்குச் சொந்தமாக கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலையத் துறை  மூலம் 5 பேர் அடங்கிய அறங்காவலர் குழுவினர் அதே பகுதியை சேர்ந்தவர்கள்  ராஜேந்திரன் தலைமையில், உமாபதி,ஆனந்தன் தட்சணா மூர்த்தி, ராமச் சந்திரன் ஆகிய 5 பேர் கோவில் அறங் காவலர் குழுவினர் 13 ஆண்டுகளுக்கு மேல்  பொறுப்பில் உள்ளனர்.

தொடர்ந்து இக்குழு வினரே பொறுப்பில் இருப்ப தால்  பல்வேறு முறைகேடு களுக்கு வழி வகுத்துள்ளது. மேலும் கோவில் விழாக்கள் நடை பெறும் போது  செலவு செய்வதில் வெளிப்படை தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. எனவே தற்போது பொறுப்பில் உள்ள அறங் காவலர்குழுவை நீக்கி,புதிய அறங்காவலர்குழுவை நியமிக்க வேண்டும். சிறப்பு அதிகாரி மேற்பார்வையில் கோவில் நிகழ்ச்சிகளை நடத்த முன்வர வேண்டும் என்று அம்மனுவில் கூறப் பட்டுள்ளது.