புதுச்சேரி, பிப். 24- ஒன்றிய பாஜக அரசின் மக்ககள் விரோத பட் ஜெட்டை கண்டித்து புதுச் சேரியில் பிரச்சாரம் நடைபெற்றது. பட்ஜெட்டை கண்டித்தும், மாநிலத்தில் ரேசன் கடைகளை திறக்காத என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. புதுச்சேரி கிருமாம் பாக்கத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத் திற்கு கட்சியின் பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங் கினார். மாநில செயற் குழு உறுப்பினர் பெருமாள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி, கொம்யூன் குழு உறுப் பினர்கள் வடிவேல், கலைச் செல்வன், அரிதாஸ், பக்கிரி மற்றும் சதாசிவம், பக்தவச்சலம், பத்மநாபன், சண்முகம், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரி, காரைக்காலில் இப்பிரச்சாரம் வரும் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.