புதுச்சேரி, ஜூன் 21- என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கை எதிர்த்து இந்தியா கூட்டணி தொடர் போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திய லிங்கம் எம்பி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், மூத்த மாநில குழு உறுப்பினர் முருகன், சிபிஐ மாநில செயலாளர் சலீம், நிர்வாகி சேதுசெல்வம், விசிக நிர்வாகி தன்ராஜ், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உட்பட இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் இயக்கங்களின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
தீர்மானம்
புதுச்சேரி மக்கள் பிரச்சனைகளுக்கு இந்திய கூட்டணி தொடர்ந்து போராட்டங் களை நடத்தும், மக்கள் நம்பிக்கையை இழந்த என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியை அகற்றி, எதிர்காலத்தில் மக்கள் நலம் காக்கும் அரசை அமைப்பதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் பணியாற்றும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.