districts

img

பாகூர் கொம்யூன் பெரியார் நகர் மக்களுக்கு குடிமனை பட்டா

புதுச்சேரி ஜூன் 27- பாகூர் கொம்யூன் பெரியார் நகர் பகுதி மக்களுக்கு இலவசகுடிமனை பட்டா வழங்கிடக்கோரி  ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரியை சந்தித்து   சிபிஎம் வலியுறுத்தி யுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில  செயற்குழு உறுப்பினர் பெருமாள், பாகூர் இடை கமிட்டி செயலாளர் சரவணன், மாநிலக் குழு உறுப்பினர் கலியன் மற்றும்சேகர், அரிதாஸ், கந்தன், ஜெயராஜ் ஆகியோர் புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தென்பெண்ணை ஆற்றில் உள்ள சுடுகாட்டிற்கு சுற்றுச் சுவர் மற்றும் ஆற்றங்கரையில் தடுப்புச் சுவர் கட்டி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.