புதுச்சேரி, மார்ச் 28- புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி ரேசன்கடைகளை திறக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா ளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ரேசன் கடைகளை மீண்டும் திறக்கப் போவதாக முதலமைச்சர் 3ஆவது முறை யாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் ஊழியர்களுக்கு 5 மாத ஊதி யம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக் கிறார். ரேசன் கடைகளை திறக்க வேண்டும் என பல கட்ட போரட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி யுள்ளது. சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பல முறை முதலமைச்சர், ரேசன் கடைகளை திறப்போம் என அறிவித் தும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. நீண்ட போராட்டத்தால் சட்டமன்ற கூட்டத் தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி 3ஆவது முறையாக மீண்டும் ரேசன் கடைகளை திறக்கப் போவதாகவும், ஊழியர்களுக்கு 5 மாத ஊதியத்தை அளிக்க உள்ளதாகவும் அறிவித்திருப்பதை நம்பிக்கையோடு கட்சி வரவேற்கிறது. எனவே முதலமைச்சர் அறிவித்தபடி ரேசன் கடைகளை திறக்க வேண்டும். ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 55 மாத ஊதியத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.